கர்ப்பிணிகளுக்காக

கர்ப்ப தாய்மார்கள் அத்திப்பழம் தேன் சிறிதளவு உப்பு சேர்த்து உண்டு வந்தால் ஆரம்ப கர்ப்ப சிதைவிலிருந்து விடுபடலாம்.

தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும் உடல் பலவீனம் கை கால் நடுக்கம் மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

திருநீற்று பச்சிலை செடியைப் பறித்து நீர்விட்டு அரைத்து மைபோல் அரைத்து சிறு உருண்டை சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும்.

நம்ப முடியவில்லை.

எனக்கு தெரிந்த என் கணவருடன் வேலை செய்த 40 வயதான ஒருவர் Heart Attack ல் இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன். அவருக்கு ஒரேஒரு மகன். கர்நாடகாவைச்சேர்ந்தவர். பார்ப்பதற்கு இது போல ஒரு நோய் அவருக்கு இருந்தது என்று கூட சொல்லமுடியாது. இந்த விசயத்தை என்னால் நம்பவேமுடியவில்லை. இது போல நிறைய வாழ்க்கையில் நடக்கும் விசயங்களை ஜீரணிப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது.

மற்றொருவருக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் குழந்தையில்லாமல் இருந்து இந்த வருடம் ஜனவரி மாதம் ஆண்குழந்தை பிறந்தது. அவரும் ரயில் விபத்தில் பலியாகிவிட்டார்.

குறைந்த வயதுள்ளவர்கள் இறக்கும்போது அந்த இறப்பு நம் மனதில் ஒருவித வலியை வேதனையை விட்டுசெல்கிறது.

இது போல ஒன்றல்ல இரண்டல்ல. நிறைய விசயங்கள். நம்பமுடியாதவைகளாகவும் ஜீரணிக்கமுடியாதவைகளாகவும் உள்ளன.

உணர்வுகள்.

மாநாட்டு ஏற்பாடுகள் சிறப்பாக நடக்கவேண்டும் என்று தலைவர் அனைத்தையும் ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்.

மாநாட்டிற்கு எப்படி செல்வது என்று இளைஞர்கள் திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.

5 நாள் லீவாமே இந்த பிள்ளைகளை எப்படி சமாளிக்கப்போறெனோ என பிரேமா கவலைப்பட்டுகொண்டிருந்தாள்.

பிரேமாவின் கல்லூரி படிக்கும் தங்கை வனிதா மற்றும் அவள் தோழிகள் லீவில் எங்கு செல்வது என திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.

பிரேமாவின் மகன் நரேஷ் தன் நண்பனிடம் டேய் 5 நாள் லீவாமே தெரியுமா என்றான்

அப்படியா ஷையா ஜாலி என்றான் ஆலன்.

பயம்

கவிதாவிற்கு மிகவும் பயமாகயிருந்தது. தமிழ் ஆசிரியர் இன்று 10 திருக்குறளை மனப்பாடம் செய்யசொல்லியிருந்தாள்.

கவிதா அவற்றை மனப்பாடம் செய்ய மறந்துபோனாள். டிவி பார்த்துகொண்டு இருந்ததில் படிக்கவேயில்லை.

3வது பீரியட் தமிழ். முதல் 2 பீரியட் முடிந்து தமிழ் ஆசிரியரும் வந்து விட்டார். ஒவ்வொருவராக ஒப்பிக்கவும் சொல்லி ஒப்பித்துகொண்டிருந்தனர். மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டிருந்தார் தமிழ் ஆசிரியை. கவிதாவிற்கு ஒரே ஒரு குறள் மட்டும் நன்றாக தெரியும்.

மாலதியை ஒப்பிக்கசொன்னார். அவள் 5 குறளை சொன்னாள். அவளை அமர சொல்லிவிட்டு கவிதாவிடம் ஒப்பிக்க சொல்லி சொன்னார் தமிழ் ஆசிரியை. 6 வது குறளை சரியாக மிக விரைவாக சொன்னாள் கவிதா.

தமிழாசிரியர் இவ்வளவு விரைவாக சொல்கிறாயே அப்படி என்றால் நீ எல்லாவற்றையும் நன்றாக படித்திருப்பாய் உட்கார் என கூறிவிட்டார்.

நிம்மதி பெருமூச்சுவிட்டாள் கவிதா.

செயல்விளைவு

முகிலன் தன் இருக்கையில் அமர்ந்திருந்தான். இன்று நேர்முகத்தேர்வுக்கு ஆட்களை தேர்தெடுக்கவேண்டும்.

பத்துபேர் தேர்வுக்கு வந்திருந்தனர்.

ஒவ்வொருவராக அழைத்து கேள்விகளைக்கேட்டுக்கொண்டிருந்தான்.

5 பேர் முடிந்துவிட்டது. 6 வது நபரை கூப்பிட்டான். உள்ளே நுழைந்த பெண்ணை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தான்.

யாரைத் தன் வாழ்நாளில் சந்திக்க கூடாது என்று நினைத்தானோ அதே அகிலா.

அவளிடமும் எல்லா கேள்விகளும் கேட்கப்பட்டன. எல்லாவற்றிக்கும் சரியாகவே பதில் சொன்னாள். இவளை எப்படி வேலைக்கு எடுத்துக்கொள்வது. இவள் முகத்தில் தினம்தினம் விழிக்கவேண்டுமே. கடவுளே என்ன எனக்கு வந்த சோதனை என எண்ணினான்.

ஒருவாரம் கழித்து உங்களுக்கு போன் செய்கிறோம் என்று கூறினான் முகிலன்.

பலவாறாக யோசித்து அகிலாவை வேலைக்கு சேர்த்துக்கொள்வது என முடிவெடுத்தான் முகிலன். தன் உதவியாளரிடம் அவளுக்கு தொலைபேசசொன்னான் இந்த செய்திக்காக.

உதவியாளர் அவளிடம் தொடர்பு கொண்டு விட்டுசொன்னார். சார் அவர்கள் வேறொரு கம்பெனியில் சேர்ந்து விட்டார்களாம் என்றார்.

முகிலன் சந்தோசப்பட்டான். அகிலா வீட்டில் கவலையுடன் அமர்ந்துகொண்டு இருந்தாள். தன் செய்த தவறு இன்று இந்த நிலையில் தன்னை நிறுத்தியுள்ளது என எண்ணி வருந்தினாள்.
வேலையில்லாமலே வேலையில் சேர்ந்து விட்டதாக பொய் சொன்னதை நினைத்து வருந்தினாள்.

ஐந்து வருடங்களுக்கு முன்னால் முகிலனும் அகிலாவும் ஒரே கம்பெனியில் வேலை புரிந்துகொண்டிருந்தனர். முகிலன் முடிக்கவேண்டிய project முடிந்துவிட்டாலும் தனக்காக காத்திருக்குமாறுசொல்வாள். ஆனால் இவள் முடித்தவுடன் அவனிடம் எதுவும் சொல்லாமல் அதிகாரியிடம் சமர்ப்பித்துவிடுவாள். இவன் சீக்கிரம் வேலைசெய்யவில்லை என்றும் வத்தி வைப்பாள். அதனால் முகிலனின் வேலை பறிக்கப்பட்டது. வேலைசெய்யவில்லையெனினும் வேலைசெய்வது போல் நடிப்பாள். தான் செய்த தீயசெயலுக்காக வந்த விளைவை எண்ணி வருத்தப்பட்டாள் அகிலா.

தாய் தரும் தவறான அறிவுரை.

ஒருசில அம்மாக்கள் திருமணம் ஆனவுடன் தங்கள் மகள்களின் வாழ்வில் தேவையில்லாமல் தலையிட்டு பிரச்சினையை பெரிதாக்குகின்றனர். பிரச்சினையே இல்லாவிட்டாலும் புதிதாக உண்டுபண்ணுகின்றனர். நல்ல உறவுகளே கிடைத்தாலும் ஒரு சிலர் அதை புரிந்து கொள்ளாமல் அலட்சியப்படுத்துகின்றனர். தாய் தந்தையரே நிரந்தரம் அல்ல. எல்லா உறவுகளும் நமக்கு தேவைதான். அதை நிறைய பேர் உணர்வதில்லை.

கணவனின் உறவினர்கள் நம் மீது கொண்டுள்ள அன்பை நிறைய பேர் புரிந்துகொள்வதேயில்லை. நம் அம்மாவே தவறான அறிவுரை கூறினாலும் மகள் ஆனவள் சிந்தித்து நல்ல முடிவை எடுக்கவேண்டும். தன் குடும்ப விவரங்களை வெளியில் சொல்வது நல்லதல்ல. நிறைய திருமணமான பெண்கள் இதை கடைபிடிப்பதில்லை.

நல்ல கணவனை தவறான அறிவுரைகளால் இழந்தவர்கள் ஏராளம். உறவு வட்டங்கள் விலகிப்போவதும் இதனால்தான். சிறிய மனக்கசப்பு பெரிய பிரச்சனையாகி ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத நிலை உருவாகி தன் உடன்பிறப்புகளையே பல ஆண்டுகள் பார்க்காத பேசாத நிலை சில இடங்களில் உள்ளது. சிந்திப்போம். நாம் நம்மையே மாற்றிக்கொள்வோம். என் மனதில் பட்டதை நான் சொல்லி உள்ளேன். மாற்று கருத்து உடையோர் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் வாய்ப்பு குறைவு

அசைவ உணவு சாப்பிடுபவர்களைவிட சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவு என நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்.

சைவ உணவில் முக்கிய இடம் பிடிக்கும் காய்கறிகளில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளை அழிக்கும் சக்தி கொண்ட பொருள்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

வெங்காயம் மஞ்சள் மற்றும் இஞ்சி ஆகியவற்றில் நோய் எதிர்ப்பு திறன்கொண்ட சத்துக்கள் அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அசைவ உணவு வகைகளில் நோய் எதிர்ப்பு கொண்ட சத்துக்கள் மிக குறைவாக உள்ளன.

மனிதர்கள் சைவ உணவுகள் சாப்பிடுவதால் நோய் எதிர்பபு திறன் கூடுகிறதா என்பது குறித்து பிரான்சை தலைமையிடமாக கொண்ட சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கனடாவை சேர்ந்த உலக சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு ஒன்றை துவக்கி உள்ளது.

இந்த ஆய்வு இரண்டரை லட்சம் பேரிடம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அவியல்

காலாவதி மருந்துகள் குறித்த விழிப்புணர்வு இப்போது அதிகரித்துள்ளது என் சகோதரியின் 8 வயது மற்றும் 12 வயது மகள்கள் இப்போது என்ன வாங்கினாலும் தேதியை சரிபார்க்கிறார்கள்.



கர்ப்பமாய் இருப்பவர்கள் வேர்கடலை போன்ற கொட்டை வகைகளை தவிர்க்கவேண்டும். கருவாடு போன்றவற்றை அறவே தொடக்கூடாது. கேரட் மாதுளை போன்றவற்றை நிறைய சேர்த்துக்கொள்ளவேண்டும்.

அன்பு குறைபாடும் குற்றங்களும்

அன்பு குறைந்திருக்கும்போது குற்றங்கள் பெரிதாகப்படுகின்றன. நாம் அன்பு செய்கிறவர்கள் ஏதாவது தவறு செய்தார்கள் என்றால் கூட நாம் அதை மிகைப்படுத்தமாட்டோம். ஆனால் நாம் அன்பு செய்யாதவர்கள் சிறு தவறு செய்தாலும் கூட அதைபெரிதுபடுத்தி பேசுவோம்.

இதை உறவுமுறைகளிலும் காணலாம். நம் மகனோ பேரன் பேத்தியோ எது செய்தாலும் சரி என கருதும் நாம் நமக்கு பிடிக்காத மற்ற உறவினர்கள் சரியாகவே செய்தாலும் அதை தவறு என்று கூறுவோர் உள்ளனர். காரணம் அன்பு குறைபாடே ஆகும்.

இயேசு தன்னைக்கொன்றவர்களை கூட மன்னித்து ”தாம் செய்வது இன்னது என்று அறியாமல் செய்கிறார்கள்” என்றார்.
இது அன்பின் மிகுதியைகாட்டுகிறது.

அன்னைத் தெரசா தனக்கு சம்பந்தமே இல்லாதவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து காத்துவந்தார். இதுவும் அன்பின் மிகுதியான நிலை.

வள்ளலார் வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்றார். பயிர் வாடுவதையே பொருக்காத வள்ளலார் எங்கே. மனிதர்களின் மனங்களை வாட செய்து சந்தோசம் அடையும் நாம் எங்கே.

நிறைய பிரச்சனைகள் தோன்றுவதற்கு இந்த அன்பு குறைபாடே காரணம். அன்பு குறைபாட்டை நீக்கி அன்பை பெருக்கி கொள்வோம்.

நலம் தரும் மருத்துவம்

எய்ட்சை தடுக்கும் வாழைப்பழம்.



முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பல்வேறு நன்மைகளைத் தரக்கூடியது. எளிதில் ஜிரணம் ஆகும். இதில் எய்ட்ஸ் நோயைத் தடுக்கும் சக்தி இருப்பதாக அமெரிக்கா ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வாழைப்பழங்களில் லேக்டின் என்னும் ஒருவகைப்புரதம் உள்ளது. இது எய்ட்ஸ் கிருமியான எச்.ஐ.வி வைரசை ஒழிக்கும் தன்மை உடையது. தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் லேக்டின் புரதம் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும். அத்துடன் எச்.ஐ.வி கிருமி உட்புகுந்தால் அவற்றை சூழ்ந்து ஒரு உறையை ஏற்படுத்தி செயல் இழக்கச் செய்யும் ஆற்றலையும் லேக்டின் தருகிறது.

புற்றுநோயின் எதிரி பப்பாளி.


எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் பழவகையில் ஒன்று பப்பாளி. இதில் புற்றுநோய்கான எதிர்ப்பு மருந்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுட உள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள். வாய் தொண்டை கல்லீரல் நுரையீரல் இரப்பை மூளை என பல உறுப்புகளையும் பாதிக்கும் வெவ்வேறு வகை புற்றுநோய்கள் இருக்கின்றன.

மருத்துவர்களுக்கு சவாலான வியாதிகளில் புற்றுநோயும் ஒன்று. இதற்கு சாதாரண பப்பாளி இலைச்சாற்றில் எதிர்ப்பு மருந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. பப்பாளி இலைகளில் புற்றுநோய் வைரஸ்களை எதிர்க்கும் டி.எச்.1 டைப் சைடோகின்ஸ் என்னும் மூலக்கூறுகள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து புற்றுநோய் தீவிரத்தை கட்டுக்குள் வைக்கிறது.

புளோரிடா பல்கலைக்கழக ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உங்கள் கவனத்திற்கு

உங்கள் உருவத்திற்கு சரியாகப் பொருந்தும் ஆடைகளையே எப்போதும் வாங்குங்கள். அப்படி சரியாகக் கிடைக்காத பட்சத்தில் சற்று பெரிய அளவுடைய ஆடைகளை தேர்தெடுங்கள். ஏனெனில் பெரிய அளவுள்ள ஆடைகளை சிறியதாக மாற்றிக் கொள்ளலாம்.

துவைத்து அயர்ன் செய்த ஆடைகளை மட்டுமே அணியங்கள்

உங்களுடைய ஆடைகளில் அதிக பட்சமாக 4 வண்ணங்களுக்கு மிகாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். அதிகப்படியான வண்ணங்கள் பார்ப்பவரின் கண்களைக் கூசச்செய்யும்

ஆடைகளுடன் பொருந்திப்போகும் நகைகள் தொப்பி கண்ணாடி காலனி ஆகியவற்றையே அணியுங்கள். அதுவும் தேவை என்றால் மட்டுமே அணியலாம்.

வாசனைத் திரவியங்களை குறைவாகப் பயன்படுத்துங்கள். அடிக்கடி வாசனை திரவியங்களை மாற்றாமல் ஒரே வாசனை திரவியத்தை தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

நகைகளை அதற்கு உரிய இடங்களில் வையுங்கள்.

மூன்று பேர்.

மூன்று பேர் ஒரு ஆள்அரவமற்ற காட்டில் தனியாக வழிதெரியாமல் மாட்டிக்கொண்டனர். அவர்களிடம் 5 ரொட்டித்துண்டுகள் இருந்தது. பசி அவர்களின் வயிற்றை கிள்ளியது.

முதலாமவர் ஒரு மருத்துவர்.

இரண்டமவர் ஒரு ஞானி.

மூன்றாமவர் ஒரு விவசாயி.

அந்த ரொட்டித்துண்டுக்கு மூவரும் போட்டிப்போட்டனர். அதற்கு முடிவு கிடைக்கவில்லை. மூவரும் ஒரு முடிவெடுத்தனர். மறுநாள் காலையில் யார் மிக உயர்ந்த கருத்தை தங்கள் திறமையால் சொல்கிறார்களோ அவர்களுக்கே அந்த ரொட்டித்துண்டென்று.

மறுநாள் காலையில் மருத்துவர் சொன்னார். கடவுள் என் கனவில் தோன்றினார். நான் அவர் அருகில் சென்று அவரை அணைத்துக்கொண்டேன். நான் கடவுளை முத்தமிட்டேன். அதனால் ரொட்டி எனக்கே சொந்தம் என்றார்.

ஞானி சொன்னார். கடவுள் என் கனவிலும் தோன்றினார் நான் அவரிடம் செல்லவில்லை. அவரே என்னிடம் ஓடோடி வந்தார். கட்டியணைத்து முத்தமிட்டார். அதனால் ரொட்டி எனக்கே சொந்தம் என்றார்.

விவசாயியின் முறை வந்தது. அவர் சொன்னார். கடவுள் என் கனவிலும் தோன்றினார். நான் அவர் அருகில் செல்லவில்லை. அவரும் என் அருகில் வரவில்லை. ஆனால் ரொட்டியை அருகில் வைத்துக்கொண்டு ஏன்டா சாப்பிடாமல் இருக்கிறாய் எனக் கேட்டார். அதனால் நான் சாப்பிட்டுவிட்டேன் என்றார்.

கர்ப்பகாலத்தின் போது சாப்பிடவேண்டிய உணவுகள்


கர்ப்பகாலத்தின்போது கொஞ்சம் அதிகமான உணவினை எடுத்துக்கொள்ளவேண்டும். 1 நாளைக்கு 300 கலோரிகள் அதிகமாக தேவைப்படும்.

புரோட்டீன்.


செல்களின் வளர்ச்சிக்கும் இரத்த உற்பத்திக்கும் தேவைப்படுகிறது.
மீன்,முட்டையின் வெள்ளைக்கரு போன்றவற்றில் புரோட்டீன் அதிகளவில் உள்ளது.

கார்போஷைட்ரேட்


உருளைக்கிழங்கு,அரிசி,பழங்கள்,காய்கறிகள்

கால்சியம்


வலுவான எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக்கத்திற்கு தேவைப்படுகிறது.

Iron


சிவப்பணுக்கள் உருவாக்கத்திற்கு தேவைப்படுகிறது.

வைட்டமின் A


கண்பார்வைக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் தேவைப்படுகிறது. கேரட் உருளைக்கிழங்கு.

வைட்டமின் C


வலுவான ஈறுகளுக்கும் பற்களுக்கும் தேவைப்படுகிறது. தக்காளி

போலிக் அமிலம்


இரத்த உற்பத்திக்கு தேவைப்படுகிறது. பீன்ஸ்,ஆரஞ்சு பழம்.

திருடர்களை கண்டுபிடிக்கும் இயந்திரம்.-




திருடர்களை கண்டுபிடிக்கும் இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனைத்து நாடுகளுக்கும் அனுப்பப்பட்டதாம்.

அனுப்பபட்ட ஒரு வாரத்தில் அமெரிக்காவில் 50 திருடர்களை பிடித்ததாம்

இத்தாலியில் 100 திருடர்களை பிடிபட்டனர்.

ஜெர்மனியில் 75 திருடர்கள் பிடிபட்டனர்.

ரஷ்யாவில் 145 திருடர்கள் பிடிபட்டனர்.

ஜப்பானில் 200 திருடர்கள் பிடிபட்டனர்.

இந்தியாவில் ஒரு திருடனைக்கூட அந்த இயந்திரத்தால் பிடிக்கமுடியவில்லை. ஏன் என்றால் அந்த மெஷின் வந்த மறுநாளிலிலேயே அந்த மெஷினைக் காணவில்லை.

நன்றி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

ஆணாதிக்கமும் பெண்களின் நிலைமையும்


ஆணாதிக்கம் பற்றி சிலர் எழுத படித்துள்ளேன். என் கருத்தையும் வெளியிடவே இந்தப்பதிவு. நிறைய பேர் ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துகின்றனர் அப்படி இப்படி என்று எழுதுகின்றனர். அடிமைப்படுத்துதல் என்றால் என்ன ? ஒரு தந்தையாகிய ஆண் தன் மகளை அடிமைப்படுத்தி படிக்க அனுமதியாமல் இருந்திருந்தால் அவர்கள் இவ்வாறெல்லாம் எழுதிக்கொண்டிருக்கமுடியுமா.

தந்தையோ தாயோ தாங்கள் உயர்தரமான வாழ்க்கை வாழவில்லையெனினும் தன் மகளோ மகனோ உயர்தரமான வாழ்க்கை வாழவேண்டும் என்றே விரும்புகின்றனர். இதில் எங்கிருக்கிறது அடிமைத்தனம்.

என் வாழ்க்கையை பொறுத்தவரை என் தந்தையோ,சகோதரனோ,கணவனோ என்னை அடிமைப்படுத்தியதாக நினைவில்லை. மாறாக என் வளர்ச்சியையே அவர்கள் எப்போதும் விரும்புகின்றனர். நுற்றுக்கு எண்பது சதவீதம் பேர்கள் இப்படித்தான் பெண்களின் வளர்ச்சியையே விரும்புகின்றனர.. எங்கோ ஒரு சில தவறுகள் நடந்துகொண்டிருக்கலாம். ஆனால் எல்லாரையும் ஒட்டுமொத்தமாக குறைகூறுவது தவறு

பெண்ணின் வெற்றிக்கு காரணமாக ஆண்கள் இருக்கின்றனர். அதனால்தான் இந்த அளவிற்கு பெண்கள் உயர்ந்துகொண்டிருப்பதற்கு காரணம்.

ஒரு சில பாதுகாப்பு காரணங்களுக்காக வீட்டிற்கு சீக்கிரம் வந்துவிடவேண்டும். நல்ல கண்ணியமான ஆடைகளை அணியவேண்டும் என்று பெற்றோர் சொல்லுகின்றனர். அதையெல்லாம்கூட ஒரு சிலர் அடிமைத்தனம் என்று சொல்கின்றனர். நம் நலத்திற்காக சொல்லப்படும் வார்த்தைகள் எப்படி அடிமைத்தனம் ஆகும்.

ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துவதில்லை. அவர்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றனர் என்பதே என் கருத்து.
இதை வாசிக்கும் தங்களின் கருத்துக்களையும் பின்னூட்டத்தின் மூலம் தெரிவிக்கலாம்.

நன்றி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

ஸ்ரீமத்தானந்தா




என்ன சிஷ்யா இன்று நம் ஆசிரமத்திற்கு ஒரு ஈ காக்காயைக்கூட காணோம்.

ஆசிரமாம் பெரிய ஆசிரமம். 2 பேரு தங்கறமாதிரியான சின்ன குடிசை மனதிற்குள் நினைத்துக்கொண்டான் சிஷ்யன் சிகாமணி

ஆமாம் குருவே.
******************************
ஒரு தொழிலதிபர் காரில் போய் கொண்டிருந்தார்.

ஆண்டவா என் பிரச்சனைக்கு நல்ல தீர்வு நீதான் தரணும்.

அப்போது கண்ணில் தென்பட்டது அந்த போர்டு. ஸ்ரீமத்தானந்தா ஆசிரமம். இங்கு சகல பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்கப்படும்.

**************************
காரை நிறுத்தினார். குருஜியைப்பார்க்க முடியுமா என்றார் சிஷ்யனிடம்.

இங்கே அமருங்கள். குருவிடம் கேட்டுகொண்டு வந்து சொல்கிறேன்.

குருவே. உம்மைப் பார்க்க ஒருவர் வந்திருக்கிறார். அனுப்பட்டுமா.

இல்லை சிஷ்யா. நான் தியானம் பண்ணுவதாக சொல். அரை மணிநேரம் கழித்து அனுப்பு.

********************
சுவாமிஜி தியானத்தில் இருக்கிறார். ஒரு அரைமணிநேரம் வெயிட் பண்ணுங்க.
சரி என்றார் தொழிலதிபர்.

அரைமணிநேரம் கழித்து இப்ப நீங்க போகலாம்.

********************
அமருங்கள்.

தங்களின் திருநாமம் ரகு அல்லவா.

ஆகா சாமி எப்படி இவ்வளவு கரக்டா சொல்லிட்டிங்க.

அதுமட்டுமா தங்களுக்கு 2 தங்கைகள் 1 தம்பி. தங்களுக்கு திருமணம் முடிந்து 12 வருடங்களாகின்றன. இப்போது தொழிலில் பிரச்சனை.

நான் சொல்வது சரியா.

100% எல்லாமே சரிங்க. என் தொழில் பிரச்சனை எப்போது தீரும் என்று கேட்கதான் வந்தேன் சுவாமிஜி.

இன்னும் 3 மாதங்களில் தீர்ந்துவிடும். கவலைப்படாமல் போங்கள்.

நன்றி சுவாமிஜி. இந்தாருங்கள் இப்போது என் காணிக்கை பத்தாயிரம் ரூபாய்.

நன்றி அதை அங்கே வைத்துவிட்டுப்போங்கள்.

*******************
குருவே இன்னைக்கு நல்ல கலெக்க்ஷன் போல

ஆமாம் சிஷ்யா.
குருவே நானும் வெளியில் இருந்து கேட்டுட்டுதான் இருந்தேன். எப்படி எல்லாத்தையும் அவ்வளவு கரக்டா சொன்னீங்க.

வேற ஒன்றுமில்லை சிஷ்யா. அவன் என் பால்ய சிநேகிதன். அவன் உள்ளே நுழைந்ததும் நான் அவனை அடையாளம் கண்டுகொண்டேன். ஆனால் நான் தாடி எல்லாம் வைத்துக்கொண்டிருப்பதால் அவன் என்னை அடையாளம் காணவில்லை. அதுவுமில்லாமல் 12 வருடங்கள் ஆகிவிட்டன அல்லவா அடையாளம் காண்பது சிரமமே.

அது சரி. தொழிலில் நஷ்டம் என எப்படி சொன்னீர்கள்.

நாளிதழ் பார்த்து தெரிந்துகொண்டேன்.

3 மாதங்களில் சரியாகிவிடும் என்று சுவாமிஜி சொன்னதால் உற்சாகமாக எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொண்டு தீர்த்துவிட்டார் தொழிலதிபர்.

****************
6 மாதங்களுக்கு பின்.

சுவாமிஜியைத்தேடி வந்தார் தொழிலதிபர்.

சுவாமிஜி தங்களுக்காக நான் என்னுடைய 25 ஏக்கர் நிலத்தில் ஆசிரமம் ஒன்று அமைத்துள்ளேன். ஆசிரமத்தை சுற்றிலும் தோட்டங்கள் செடி கொடிகள் என அருமையாக உள்ளது.
தங்கள் இனிமேல் ஆசிரமத்திற்கு வந்து சேவையாற்ற வேண்டும் என்றார்.

எல்லாம் அவன் செயல். நான் வேறென்ன சொல்ல போகிறேன்.

அப்பா இப்போதான் நமக்கு குடிசையில் இருந்து கோபுரத்திற்கு போற அதிர்ட்ஷம் வந்திருக்கு என்று சந்தோசத்துடன் சென்றான் சிஷ்யன் சிகாமணி.

முற்றும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

அவளா அப்படி(சிறுகதை)


கண்ணன் மாலை காய்கறி வாங்க கடைத்தெருவிற்கு போயிருந்தான்.

காய்கறி வாங்கிக்கொண்டு திரும்பும் போது கண்ணா கண்ணா என்று அழைத்த குரல்கேட்டு திரும்பினான். அவர்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் வாசுதேவன்.

ரொம்ப நாளா உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லனுமின்னு ஆனா உங்களை பாக்கவே முடியறதில்லை.

ம் சொல்லுங்க என்றான்.

இது என் Wife சொன்ன விசயம். உங்க wife Daily நீங்க ஆபிஸிக்கு போன உடனே ஒரு 2 மணிநேரம் எங்கயோ போய்ட்டு வராங்கலாம். இது தினமும் நடக்குதாம்.

எதுக்கும் உங்க காதுலயும் போட்டு வைக்கலாமின்னு. சரிங்க வாசுதேவன். நான் என்ன ஏதுன்னு பாக்கறேன். அவசரமாய் சொல்லிவிட்டு நழுவினான்.

ஒரே குழப்பமாக இருந்தது கண்ணனுக்கு தன் மனைவி தன்னிடம் எதையும் மறைத்ததில்லையே. எங்கு செல்கிறாள் தினமும். நாளை சென்று பார்த்துவிடவேண்டியதுதான்.

அடுத்தநாள் அலுவலகம் செல்லுவதாக சொல்லிவிட்டு தெரிந்த நண்பனின் கடையில் wait பண்ணினான். தன் மனைவி கிளம்பியபின் பின்தொடர்வதற்காக.

கண்ணனுடைய மனைவி ரேவதி வீட்டைவிட்டு கிளம்பினாள். இவனும் சற்று இடைவெளி விட்டு பின் தொடர்ந்தான்.
அங்கே ஒரு ஆசிரமத்திற்குள் நுழைந்தாள். பிள்ளைகள் படிப்பதற்கான பள்ளிகளும் ஆசிரமத்திலேயே இருந்தன. அங்கே சென்றாள் அவன் மனைவி. இவனும் பின்தொடர்ந்தான்.

3ம்வகுப்பிற்குள் நுழைந்த அவளை பார்த்தவுடன் ஒரு சிறுமியை அவளிடம் அனுப்பிவைத்தார் ஆசிரியை.

கண்ணன் ஒரு மரத்தின் பின்னே ஒளிந்துகொண்டான். அந்த சிறுமிக்கு தான் கொண்டு வந்திருந்த டிபன் பாக்ஸை தந்தாள்.
அவளும் மம்மி நாளைக்கு சீக்கிரமே வர்ரீயா என்றாள். ம் சரிம்மா. நீ சமத்தா படிக்கனும். மம்மி போய்டு வரேன் என்றாள்.

வீட்டிற்கு கிளம்பிவிட்டாள் மனைவி ரேவதி. கண்ணனுக்கு பல எண்ணங்கள் பலபல குழப்பங்கள். அந்த சிறுமி பார்ப்பதற்கு வேறு தன் மனைவியின் சாயலிலேயே இருந்ததால் குழப்பம் அதிகமாகியது. ஒருவேளை திருமணத்திற்கு முன் தவறான தொடர்பு இருக்குமோ அதனால் பிறந்த குழந்தையோ. கண்ணனுக்கு யோசித்து யோசித்து தலைவலித்தது.

மாலை எப்போதும் போல வீடு திரும்பினான். என்னங்க இன்னைக்கு ரொம்ப டயர்டா இருக்கீங்க. ஆபிஸ்ல ரொம்ப வேலையோ என்றாள்.

இதுக்கும் ஒன்னும் கொறச்சலில்லை மனதில் நினைத்துக்கொண்டான்.

காலைல எங்க போன நான் ஒரு பைல எடுக்கறதுக்காக வந்தேன். வீடு lock பண்ணியிருந்துச்சு என்றான்.

கடைத்தெருவிக்கு போனேங்க என்றாள்.

இது சரிப்படாது. நேரடியாகவே விசயத்திற்கு வந்தான். யார் அந்த குழந்தை. காலைல நடந்ததெல்லாம் நான் பாத்திட்டு தான் இருந்தேன்.

ரேவதியின் முகம் இருட்டிபோய்விட்டது. அது வந்து அது வந்து என்று இழுத்தாள்.

ம் சொல்லு கர்ச்சித்தான்.

அது எங்க அக்காவோட குழந்தைங்க. அக்காவும் மாமாவும் லவ் மேரேஜ்ங்கறாதால எங்கஅம்மா அப்பாவோ அவங்க அம்மா அப்பாவோ அவங்க கல்யாணத்த ஒத்துக்கலை. அதுமட்டுமில்ல அவளை தலைமுழுகிட்டாங்க. ஆனா நான் மட்டும் அவகூட கான்டக்ட்ல இருந்தேன்.

இரண்டு பேரும் ஒருநாள் பைக் ஆக்ஸிடேன்ட்ல இறந்துட்டாங்க. குழந்தைய ஆயா பொறுப்புல விட்டுட்டுபோயிருந்தாங்க. இந்த விசயம் இதுவரைக்கும் எங்க அப்பாஅம்மாவுக்கு கூட தெரியாதுங்க. அவங்க எங்கியோ இருக்கறதாதான் நினைச்சிட்டு இருக்காங்க.

நான்தான் குழந்தைய ஆசிரமத்துல சேத்து வளக்கறதுக்கு ஏற்பாடு பண்ணேன். என்னை மன்னிச்சுடுங்க உங்ககிட்ட சொல்லாததுக்கு என்று அழுதாள்.

இதை என்கிட்ட முன்னமே சொல்லியிருந்தா குழந்தைய நாமளே வளர்த்திருக்கலாமில்ல நமக்கும் கல்யாணமாகி 6 வருசமாக குழந்தையில்ல. நம்ம குழந்தையா அவளை பாத்திருக்கலாமில்ல.

சரி சரி கிளம்பு நம்ம போய் குழந்தைய அழைச்சிட்டு வந்திரலாம் என்றான் குழப்பங்கள் நீங்கபெற்ற கண்ணன். ரேவதியும் மகிழ்ச்சியாக கிளம்பினாள்.

முற்றும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

தம்பதியருக்காக-காதலர் தின வாழ்த்துக்கள்.


கரம்பிடித்த நாள்முதலாய்
இன்பத்தில் இணையாக
துன்பத்தில் துணையாக

பருவங்கள் பலகடந்தும்
துளியும் குறையாத
காதலுடன் வாழும்

தம்பதிகள் அனைவருக்கும்
இனிய காதலர்தின
வாழ்த்துக்கள்.

வற்றா நேசத்துடன்
வளமான வாழ்க்கையை
தொடருங்கள் இனிதாக.

எதிர்கால பக்கங்களில்
உண்மை நேசத்திற்கு
உதாரணமாய் சிறந்திடுவீர்.

எமதா்மராசாவின் தீா்பு

மூன்று முக்கியமான அரசியல் தலைவர்கள் ஆட்டோ ரிக்சாவில் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது ஒரு விபத்து ஏற்படுகிறது. மூன்று பேரும் இறந்துவிடுகின்றனர்.

இவர்களின் மரணத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் எமதர்மராஜா அவர்களை எமலோகத்திற்கு கூட்டிச்செல்கிறான். அவர்களின் பெயர் XX,AA,BB என வைத்துக்கொள்வோம்.(நிஜ தலைவர்கள் பெயர் வைத்தால் ஆட்டோ வரும்னு பயமா இருக்கு)

எமராஜா XX மற்றும் AA இருவரையும் சொர்க்கத்திற்கு அனுப்பிவைக்கிறார்.

BB யை நரகத்திற்கு அனுப்பிவைக்கிறார். BB இது என்ன அநியாயமான தீர்பாகவுள்ளது. அவர்களும் தான் நிறைய குற்றங்கள் செய்து உள்ளனர். மக்கள் பணத்தில் சொத்துக்கள் சேர்த்துக்கொண்டுள்ளனர். என்னைமட்டும் ஏன் நரகத்திற்கு அனுப்பினீர்கள் என கேள்வி எழுப்பினார்.

சரி உங்களுக்கு நான் ஒரு பரிச்சை வைக்கிறேன். அதில் பாசாகிறவர்கள் சொர்கத்திற்கு பெயில் ஆகிறவர்கள் நரகத்திற்கு என்றார் எமதர்மராசா.

மூவரும் பரிச்சைக்கு ஒத்துக்கொண்டனர். எமராசா XX அவர்களிடம் இந்தியா எப்போது சுதந்திரம் பெற்றது என்ற கேள்வியை கேட்டார். XX -1947 என்று சரியான விடையை சொன்னார். XX பாசாகிவிட்டதால் சொர்க்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.


AA அவர்களிடம் சுதந்திரப்பேராட்டத்தின்போது எத்தனைபேர் இறந்தனர். மூன்று விடைகளில் ஒன்றை தேர்தெடுக்கலாம் என்றார். 100000,200000,300000. AA -200000 என்ற சரியான விடையை தேர்தெடுத்ததால் சொர்க்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

BB அவா்களிடம்சுதந்திரப்பேராட்டத்திற்காக இறந்த இரண்டு இலட்சம் பேர்களின் பெயர்களை எழுதுக என்றார் எமதர்மராசா. BBக்கு பதில் தெரியாததால் பெயிலாகிவிட்டார். நரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

கதையின் நீதி : தலைமை(MANAGEMENT) என்ன முடிவெடுக்கிறதோ அதை எப்படியும் செயல்படுத்தியே தீரும்.


முற்றும்

நன்றி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

இணையத்தில் கிடைத்தவை











ஆழமறிந்து.



நர்மதா ஒரு கணிப்பொறி சார்ந்த நிறுவனத்தின் சென்னை கிளையில் வேலை செய்கிறாள். தனக்கு கொடுக்கப்பட்ட வேலை முடிந்ததும் orkut ல் scrap செய்வதும் google ல் chat செய்வதுமே அவள் வேலை. இதன் வழியாக நண்பனாக அறிமுகம் ஆனான் தினேஷ்.

பார்க்காமலேயே நர்மதா தினேஷின் நட்பு நாளுக்குநாள் வளர்ந்தது. காதலாக மலர்ந்தது. தான் பெங்களுரில் கணிப்பொறி நிறுவனத்தில் வேலைசெய்வதாக சொன்னான். ஒருநாள் நேரில் சந்திப்பதாகவும் சொன்னான். நர்மதாவும் அவனை தன் வீட்டிற்கு அழைத்தாள். அவனும் வந்து நர்மதாவின் தாய்தந்தையிடம் நன்கு பேசினான். பார்ப்பதற்கும் அழகனாக தெரிந்தான்.

நர்மதாவின் அலுவலக நண்பர்கள் சரியாக விசாரிக்காமல் யாரோ ஒருவனை நம்பாதே. திருமணம் செய்துகொள்ளாதே என அறிவுரை கூறினர். நிஜத்தில் நடந்த பல விசயங்களையும் சொல்லி நர்மதாவை எச்சரித்தனர். நர்மதா யார் பேச்சையும் கேளாமல் தன் காதலில் உறுதியாக இருந்தாள். மனிதன் என்று பிறந்துவிட்டால் யாராவது ஒருவரை நம்பி அல்லது சார்ந்துதான் வாழவேண்டும். நான் தினேஷை நம்புகிறேன். அதற்கும் மேலே என்னை நம்புகிறேன். எந்த ஒரு தீமையும் என்னை எப்போதும் அணுகாது என்பதில் உறுதியாய் நேர்மறை எண்ணத்தோடு இருக்கிறேன் என்றாள்.

தனக்கு தாய்தந்தை யாரும் இல்லையெனவும் அதனால் நாம் திருமணம் முடிந்தவுடன் சென்னையிலேயே வேலைபார்த்து செட்டில் ஆகிவிடலாம் என்றும் கூறினான். நர்மதாவும் சரிஎன்றாள்.

ஒரு சுபயோக சுபதினத்தில் நர்மதா தினேஷின் திருமணம் நடந்தது. தினேஷிற்கு சென்னையிலேயே வேலையும் கிடைத்தது.
மனம்போல் மாங்கல்யம் அடையப்பெற்ற இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தினர்.

குறையப்போகும் மக்கள்தொகை.

2050 ஆண்டு வாக்கில் மக்கள்தொகை மிக அதிக அளவில் குறையும். விவரங்களுக்கு பின்வரும் கட்டுரையைப் படிக்கவும்

NEGATIVE POPULATION GROWTH

The latest data from the Population Reference Bureau shows that there are twenty countries in the world with negative or zero natural population growth. This is unprecedented in history!
This negative or zero natural population growth means that these countries have more deaths than births or an even number of deaths and births; this figure does not include the impacts of immigration or emigration. Even including immigration over emigration, only one of the twenty countries (Austria) is expected to grow between 2006 and 2050.
The country with the highest decrease in the natural birth rate is Ukraine, with a natural decrease of 0.8% each year. Ukraine is expected to lose 28% of their population between now and 2050 (from 46.8 million now to 33.4 million in 2050).
Russia and Belarus follow close behind at a 0.6% natural decrease and Russia will lose 22% of their population by 2050 – that is a loss of more than 30 million people (from 142.3 million today to 110.3 million in 2050).
Japan is the only non-European country in the list and it has a 0% natural birth increase and is expected to lose 21% of its population by 2050 (shrinking from 127.8 million to a mere 100.6 million in 2050). The streets of Tokyo won’t be as crowded in a few decades as they are today!
Here's the list of the countries with negative natural increase or zero negative increase in population...
Ukraine: 0.8% natural decrease annually; 28% total population decrease by 2050
Russia: -0.6%; -22%
Belarus -0.6%; -12%
Bulgaria -0.5%; -34%
Latvia -0.5%; -23%
Lithuania -0.4%; -15%
Hungary -0.3%; -11%
Romania -0.2%; -29%
Estonia -0.2%; -23%
Moldova -0.2%; -21%
Croatia -0.2%; -14%
Germany -0.2%; -9%
Czech Republic -0.1%; -8%
Japan 0%; -21%
Poland 0%; -17%
Slovakia 0%; -12%
Austria 0%; 8% increase
Italy 0%; -5%
Slovenia 0%; -5%
Greece 0%; -4%

அன்றும் இன்றும்

ஏங்க இங்க பாருங்க உங்களத்தான்

என்ன என்றான் சுகுமார்.

பக்கத்து வீட்டு மாலா நிலம் வாங்கிட்டாங்க. பெரிய ரியல் எஸ்டேட் வியாபாரிகிட்டங்க. முதல்ல லட்சம் ரூபா கட்டினாப் போதுமாம். அப்புறம் மாசாமாசம் தவணைல கட்டலாமாம் நல்ல திட்டமா இருக்குங்க. நாமாளும் வாங்கலாங்க.

இப்ப லட்ச ரூபாய்க்கு எங்க போறது.

கடனை கிடனை வாங்கி வாங்கலாங்க. கடன் என்ற வார்த்தையே பிடிக்காது சுகுமாருக்கு.

அதல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது. வாங்கறதார்ந்த மொத்தகாசும் குடுத்து வாங்கனும். சும்ம தொண தொணங்கதா.

நான் சொல்லி எத நீங்க கேட்டு இருக்கீங்க. ம் எல்லாம் என் தலையெழுத்து.

இதைச்சொல்லிசொல்லியே புலம்பிக்கொண்டிருந்தாள் 3 மாதகாலமாக.

சுகுமார் அன்று லேட்டாக வீட்டிற்கு வந்தான்.

என்னங்க உங்களுக்க விசயம் தெரியுமா?

என்ன என்றான்.

அந்த REAL ESTATE வியாபாரி மொத்த பணத்தையும் சுருட்டிட்டு ஓடிட்டானாங்க. TV News ல சொன்னாங்க.

நல்லவேல நாம தப்பிச்சோம். வாங்கியிருந்தா 1 லட்சரூபா போயிருக்கும் என்றாள். நீங்க வாங்கவேணா சொன்னது நல்லதாப்போச்சு என்றாள் சந்தோசமாக.

முற்றும்

நன்றி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

சுயநலத்தின் உச்சங்கள்.

உண்மைச்சம்பவங்கள்.

சம்பவம்-1



இது சென்ற வருடம் நடந்த உண்மை சம்பவம்(நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம்). தன் பழைய காதலுக்காக மெத்த படித்த கணிப்பொறி துறையில் பணியாற்றிய மாதம் 3 லட்சத்திற்கு மேல் சம்பாதித்த மேதாவி ஒருவர் தன் மனைவியை(மனைவி பெங்களுர் IBM ல் 60000 ஊதியத்திற்கு வேலை செய்து கொண்டு இருந்தாராம்) இரும்புகம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு யாரோ கொன்றதுபோல் நாடகமாடி பின் அகப்பட்டுகொண்டார். இத்தனைக்கும் அவருடைய பழைய காதலி ஒன்றும் திருமணமாகாமல் இல்லை. திருமணமாகி விவாகரத்து வாங்கினவராம்.(இது எப்படி இருக்கு பாருங்க அந்த அம்மணிகிட்ட மாட்டின அப்பாவி யாரோ)

சம்பவம்-2



இது 2006ம் ஆண்டு மூணாறில் நடந்த சம்பவம். திருமணமான சில நாட்களிலே கணவனை தன் பழைய காதலன் துணையுடன் கொன்றாள் வித்யா என்கிற பெண். நகைகளுக்காக யாரோ கொன்றார்கள் என்று நாடகமாட எண்ணியிருக்கிறார்கள். பின் மாட்டிக்கொண்டார்கள்.

இதுபோல எத்துணை எத்துணையோ தினசரி பத்திரிகைகளில் வாசிக்கிறோம். இது போன்ற நபர்களுக்கு பிறர் உயிரை பறிக்கும் அதிகாரத்தை வழங்கியது யார். தனக்காக தன் சுயநலத்திற்காக அடுத்தவர் உயிரை எடுக்கும் அளவிற்கு விஷவிருட்சம் அவர்கள் மனதில் விதைத்தது யார்.

முதல் சம்பவத்தில் திருமணத்திற்கு முன்னமே தனக்கு அந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறி இருக்கலாம். அல்லது திருமணம் நடந்த பிறகாவது அந்த பெண்ணிடம் தன் பழைய காதலை கூறி விவாகரத்து வாங்கிக்கொண்டு இருக்கலாம். அந்தப்பெண் உயிருடன் தன் சம்பாத்தியத்தில் வாழ்ந்திருப்பாள். எதுவுமே செய்யாமல் தானும் இப்போது கம்பி எண்ணிக்கொண்டு மனைவியையும் வாழவிடாமல் செய்துவிட்டான் அந்த சுயநலமி.


இரண்டாவது சம்பவத்திலும் அப்படியே இந்த மெத்த படித்த இது போன்று வாழ்க்கையை படிக்காமல் தானும் கெட்டு பிறர் வாழ்க்கையும் கெடுக்கும் சுயநலத்தின் உச்சங்கள் திருந்துவார்களா?

உப்பு தின்னவன் தண்ணி குடிச்சே தீரணும் தப்பு பண்ணவன் தண்டனை அனுபவித்தே தீரணும் இதுதான் உலக நியதி.

தனக்கோ பிறருக்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ மனத்தளவிலோ உடலளவிலோ துன்பம் விளைவிக்காத செயல்களே ஒழுக்கம் என வரையறுக்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

நன்றி

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.

.

காதலர் தினத்திற்காக -ஆா்யா விமா்சனம்



நான் குட்டி படம் பார்க்கவில்லை. ஆனால் தெலுங்கில் ஆர்யா படம் சமீபத்தில் தான் பார்த்தேன். இந்த படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள். நாயகன் ஆா்யா நாயகி கீதா மற்றொரு நாயகன் அஜய்.

அஜய் என்ற பணக்கார வாலிபன் கீதா என்ற பெண்ணை விரும்புவதாக சொல்லுகிறான். உடனடியாக காதலை சொல்லவில்லை என்றால் தான் கோபுரத்தில் இருந்து குதித்துவிடுவேன் என கூறுகிறான். கீதாவும் தோழிகளின் வற்புறுத்தலால் காதலிக்கிறேன் என்று கூறிவிடுகிறாள். தன் கொலுசை எடுப்பதற்காக ஒரு வாலிபன் கடலில் குதித்து இறந்துவிட்டான் என்று வருத்தப்படும் கீதா. அஜயும் ஏதாவது செய்து கொண்டுவிடுவான் என்ற பயத்தின் காரணமாக காதலை சொல்கிறாள்.





அவர்கள் படிக்கும் கல்லூரிக்கு புதிதாக வந்து சோ்கிறான் ஆர்யா.
அவனும் கீதாவிடம் தன் காதலை தெரிவிக்கிறான். என்காதலை நீ ஏற்றுக்கொள்ளாவிட்டால் பரவாயில்லை. என் காதலை உணர்ந்தால் போதும் என்கிறான். கீதா அவனைவெறுப்பதாக கூறுகிறாள்.

அஜய் ஆள் வைத்து ஆர்யாவை அடிக்கிறான். அஜய்க்கு வேறு பணக்கார பெண்ணாக பார்க்கிறார் அஜய்யின் தந்தை. அந்த பெண்ணும் இவர்களுடன் கல்லூரியில் படிக்கிறாள். நிறைய ஆண்நண்பர்களின் சகவாசம் உள்ளது அந்த பெண்ணிற்கு. அஜய் அதனால் அந்த பெண்ணை வெறுக்கிறான். திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என்று தந்தையிடம் கூறுகிறான்.

தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. கீதாவை மிரட்ட ஆள் அனுப்புகிறார். கீதா நான் இப்போது என் காதலில் தோற்றுவிட்டேன் இப்போது உனக்கு சந்தோசமா என ஆர்யாவைக் கேட்கிறாள். நான் இருக்கும்வரை உன்னை தோற்க விடமாட்டேன் என அவர்களுக்கு உதவுகிறான் ஆர்யா.

வேறிடத்திற்கு தப்பிச்செல்கின்றனர் மூவரும். ரவுடிகள் தலைவனை கீதா செருப்பால் அடித்து விடுகிறாள். இதனால் கடும் கோபம் கொள்ளும் அவன் கீதாவை தேடுகிறான். அஜயும் கீதாவும் நடந்து செல்லும்போது கீதாவை மடக்கிவிடுகிறான் ரவுடிகள் தலைவன். அஜயையும் கத்திகாட்டி மிரட்டுகிறான்.
அஜய் பயத்தில் ஓடி விடுகிறான்.

ஆர்யா கீதாவை காப்பாற்றி இருவரையும் அழைத்துச்செல்கிறான். அஜய் சொல்லாமல் கொள்ளாமல் தன் தந்தையிடம் திரும்பச்செல்கிறான். ஆர்யா கீதாவை தன் குடிசையில் நன்கு கவனித்துக்கொள்கிறான். அவனுடைய அன்பைக்கண்டு கீதா ஆர்யாவின்பால் காதல் வசப்படுகிறாள்.

அஜய் தன் தந்தையை சமாதானப்படுத்தி அழைத்துவருகிறான். அஜய் கீதாவின் திருமணமும் நிச்சயிக்கப்படுகிறது. தனக்காக கடலில் குதித்த வாலிபன் ஆர்யாதான் என அறிகிறாள் கீதா. தாலிகட்டும்நேரத்தில் தனக்கு ஆர்யாவைத்தான் பிடித்திருக்கிறது என கீதா ஆர்யாவிடம் செல்கிறாள்(சினிமாவில் இப்படி காண்பிப்பதால் தான் நிஜ வாழ்க்கையில் சில பெண்கள் இப்படி செய்கிறார்கள் போல பிறருக்கு வரும் துன்பத்தை உணராமல் தன் சுயநலத்திற்காக திருமணத்தின் போது காணாமல் போகிறார்கள் ம்ம் என் செய்ய எல்லாம் காலத்தின் கோலம்).

முற்றும்

நன்றி

வாழ்க வளமுடன்

.

கடந்து வந்த பாதை.(சிறுகதை)



நரேந்திரன் தன் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை தன் சொந்த 2 படுக்கையறை கொண்ட புது வீட்டில் அமர்ந்து கொண்டு அசைபோட ஆரம்பித்தான்.

நரேந்திரனின் அப்பாவிற்கு ஒரு அரசு அலுவலகத்தில் Clerk வேலை. நரேந்திரனுக்கு முன் மூன்று அக்காக்கள். 4 பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைத்தார் நரேந்திரனின் அப்பா ராகவன். வாடகை வீட்டு வாசம். வாடகை வீடே பெரியது. 1000 ரூபாய் வாடகை.(அப்போதெல்லாம் 1000 ரூபாய்க்கே பெரிய வசதியான வீடுகள் கிடைத்துக்கொண்டிருந்த காலம். இப்போது 10000 ரூபாய்க்கு கூட சென்னையில் நல்ல வசதியான வீடுகள் கிடைப்பதில்லை)

ஓய்வு பெறும் முன்னமே தன் சேமிப்பை கொண்டு தன் மகள்களை நல்ல இடங்களில் திருமணமும் முடித்துக்கொடுத்தார். நரேந்திரனையும் நன்றாக படிக்க வைத்துவிட்டார். ஓய்வு பெற்றபின் வந்த பணத்தில் ஒரு 2கிரவுண்ட் நிலம் வாங்கி 1 படுக்கையறை மற்றும் 3 அறைகள் உள்ள வீட்டை கட்டிமுடித்து விட்டார். தன் பிந்தைய வாழ்நாளை மனைவியுடன் கழித்தார் மகிழ்ச்சியுடன்.

நரேந்திரனுக்கு பாரின் போகவேண்டும் என்ற இலட்சியம். தன் எண்ணப்படியே பாரினுக்கு போய் ஒரு வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றினான். திருமணமும் முடிந்தது. தன் மனைவியுடன் அயல் தேசம் பறந்தான்.

தாய்தந்தையின் காலத்திற்கு பிறகு அப்பா கட்டிய அந்த வீட்டை விற்று 4 பேரும் பங்கிட்டுக்கொண்டனர்.


நரேந்ததிரனுக்கு 2 குழந்தைகள் 1 மகன் 1 மகள். பிள்ளைகள் பெரியவர்களும் ஆகிவிட்டனர். நரேந்திரனை பிரிந்தும் சென்றுவிட்டனர்.
அயல்தேச கலாச்சாரம் துணைகளை சீக்கிரமாகவே தேடிக்கொண்டனர். சீக்கிரமாக விவாகரத்து வாங்கி பிரிந்தும் விட்டனர்.
இப்போது வேறு துணைகளோடு இணைந்துள்ளதாக கேள்வி.(இது எவ்வளவு நாளைக்கோ ஆண்டவனுக்கே வெளிச்சம்)

நரேந்திரனுக்கு ஓய்வு பெற்றபிறகு தன் தாய்நாட்டிற்கு வந்து செட்டில் ஆக வேண்டும் என ஆசை. ஆனால் அவன் மனைவி அதற்கு உடன்படவில்லை. அவளுக்கு அமெரிக்காதான் பிடித்துள்ளதாம். அவளுக்கு தேவையான வசதிகள் செய்துகொடுத்துவிட்டு மீதம் இருந்த 80 லட்சம் பணத்துடன் இந்தியா திரும்பினான் நரேந்திரன்.




வீடு வாங்க அலைந்து திரிந்து சென்னை புறநகர்ப்பகுதியில் ஒரு 2 படுக்கையறைகொண்ட வீட்டை 60 லட்சத்திற்கு வாங்கினான். இப்போது புது வீட்டில் தன்னத்தனியாக யோசித்துக்கொண்டு இருக்கிறான் தான் நினைத்ததை சாதித்தோமா இல்லையா என்று.
இவ்வளவுகால அமெரிக்கா வாசத்திற்கு பிறகு தன்னால் தன் அப்பா கட்டிய வீடடைவிட 1 படுக்கையறை அதிகம் உள்ள வீட்டைத்தான் வாங்க முடிந்தது. இதற்காக தான் இழந்தது எத்துணை எத்துணை. நினைக்கையில் வருத்தமாக இருந்தது நரேந்திரனுக்கு.

நரேந்திரன் ஜெயித்தானா இல்லையா விடை தெரிந்தால் சொல்லுங்கள்.

நன்றி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
.

புதுஉலகம்.

கைநீட்டி வாங்க
தேவையில்லை
வங்கிக்கணக்கிற்கு
வந்துவிடுகிறது
ஊதியம்.

மனதின் எண்ணங்கள்
நிமிடத்தில்
எழுத்துக்களாக
பதிவுலகில்.

ஒரு கோடியில் உள்ள
சித்ராவின் எண்ணத்தை
மறுகோடியில் உள்ள
மித்ரா அறிகிறாள்.

என்னே விந்தை
உலகம் சுருங்கியது
மனிதர்கள் நெருங்கினர்

ஆசிரியர் மாணவர்
ஆராய்ச்சியாளர்
கணிப்பொறியாளர்
வடிவமைப்பாளர்
வங்கியாளர்
பாகுபாடில்லை
இப்புதுவுலகில்.

இப்போதே இப்படி
இன்னும் வருங்காலம்
இன்னும் எத்துணை
அதிசயங்கள் கொண்டிருக்குமோ
வரவேற்போம் புதுஉலகை.


நன்றி

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

.

ஆராயத்தவறிய ஆசிரியர்.

நான் 9ம் வகுப்பு படிக்கும்போது நடந்த கசப்பான சம்பவம் இது. அப்போது எழுதிய கணித பரிட்சைக்கான விடைத்தாள்கள் கொடுக்கப்பட்டன. வழங்கியதும் என் விடைத்தாளை என் தோழி பார்த்துக்கொண்டிருந்தாள். பார்த்துவிட்டு இங்கே பாரு ஒரு
Question நீ correct ஆக எழுதியிருக்கிறாய். Sir திருத்தாம விட்டுட்டார் என்றாள். நானும் பார்த்தேன் திருத்தாமல் தான் விட்டிருந்தார். போய் கேளு என்றாள் தோழி. நான் போகமாட்டேன் என்றேன். எனக்கு அவரிடம் கேட்க பயம். ஆனாலும் என் தோழி விடவில்லை. போய் கேளு. நீ கேட்கலைன்னா நான் கேட்கிறேன் என்றாள். நானே சென்று அவரிடம் கேட்டேன். என் தோழியும் உடன் வந்தாள்.

அவரோ அவரின் பிழையை ஒப்புக்கொள்ளாமல் நீ இப்போதுதான் இந்த விடையை எழுதியிருக்கிறாய் என என்மீதே குற்றத்தை திருப்பிவிட்டார். எல்லா மாணவிகள் முன்னிலையில் திட்டியும்விட்டார். எனக்கு மிகுந்த மனவருத்தமாகிவிட்டது. ஏன்தான் கேட்டோமோ என்றாகிவிட்டது.

தான் செய்த தவறை ஒப்புக்கொள்ளாமல் தவறே செய்யாத என்னை மனவருத்தம் அடையசெய்தார் அந்த ஆசிரியர். சிலசமயங்களில் இப்படித்தான் தவறே புரியாமல் தண்டனைபெற வேண்டியுள்ளது நிஜவாழ்க்கையில்.

இறைநிலையானது என்னுடைய உண்மையான உழைப்பிற்கு மதிப்பளித்தது. 10ம் வகுப்பில் நடந்த பொதுத்தேர்வில் நான் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றேன். மனிதர்கள் தவறுசெய்யலாம் ஆனால் இறைநிலை எப்போதும் தவறுவதேயில்லை. நாம் என்ன செயல் செய்கிறோமோ அதற்கான விளைவை இன்றோ நாளைக்கோ அல்லது வேறேப்போதோ நமக்கோ நம் சந்ததிக்கோ தந்துவிடும். இறைநிலையை யாரும் ஏமாற்ற முடியாது. இதைத்தான் செயல்விளைவு என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

நன்மை ஒன்று செய்தீர்கள் நன்மைவிளைந்தது. அட தீமை ஒன்று செய்தீர்கள் தீமை விளைந்தது என ராசாசின்னரோஜா படத்தில் ஒரு பாடல் வருமே அதுபோல.

நன்றி.
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
.

சங்கராந்தி(சிந்தனை)

சங்கராந்தி என்ற தெலுங்கு படம் பார்த்தேன்(பழைய படம்தான்). அந்த படம் தமிழிலும் வந்துள்ளது பெயர் தெரியவில்லை. பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாட்டு வருமே அந்த படம்(படம் பெயர் தெரிந்தவர்கள் சொல்லவும்).

இப்போது தெரிந்து விட்டது.. அந்த படத்தின் பெயர் ஆனந்தம்.


மிக அருமையான படம். குடும்பக்கதை மிகவும் நன்றாக உள்ளது.
அதில் உள்ள மூத்த சகோதரன் தன் சகோதரர்களின் நலனுக்காக மற்றும் குடும்ப நலனுக்காக உழைக்கிறான். அதனால் தாமதமாக திருமணம் செய்து கொள்கிறான். அதனால் அவனுக்கு குழந்தையில்லை(தாமத திருமணத்தால்).

அதில் மூத்த சகோதரனின் பெயர் ராகவா. அவனுக்கு திருமணம் ஆகவில்லையென அவனுடைய தாய் மிகவும் கவலைப்படுகிறாள். நிறைய பிரார்த்தனைகள் செய்கிறார். திருமணம் செய்ய மறுக்கும் மூத்த சகோதரன் சிநேகாவைப் பார்த்ததும் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டு திருமணம் நடக்கிறது.

எனக்கு தெரிந்த குடும்பம் ஒன்று உள்ளது. அதிலும் இதேபோல் நான்கு சகோதரர்கள் இருக்கிறார்கள். மூத்தவனுக்கு திருமணம் ஆகிவிட்டது(தாமதத் திருமணம்தான்).

நல்ல பழக்கங்கள் உள்ளவர்கள் நால்வரும். அந்த நல்ல பழக்கங்களுக்கு காரணம் அவர்களின் பெற்றோரே. பிள்ளைகள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை அப்படியே அன்னையிடம் தந்துவிடுகிறார்கள். மற்ற மூவரும் திருமண வயதை நெருங்குகிறார்கள். ஆனால் அந்த அன்னையும் தந்தையும் பிள்ளைகளின் திருமணத்தைப் பற்றி கவலையேபடுவதில்லை. அவர்களுக்காக எதுவும் சேமிப்பதுமில்லை. தேவையோ இல்லையோ தான் நினைத்த பொருட்களை வாங்கிவிடுவது. ஆடம்பர வாழ்க்கை வாழவேண்டும் என நினைப்பது. எவ்வளவு பணம் வந்தாலும் ஏதாவது செலவு என்றால் தன்னிடம் எதுவுமே இல்லை என்று சொல்வது இது அவரின் வாடிக்கை.

மூத்த சகோதரன் நல்லது சொன்னாலும் அவர்கள் கேட்பதில்லை. நான் உங்களுக்காக எதுவும் சோ்த்துவைக்கவில்லையா என்ன?
அங்கங்கே எவ்வளவு கடன் வைச்சிருக்காங்க என்று பாரு என்கிறார் பதிலுக்கு. கடன் எதுவும் வைப்பதில்லையாம் அது அவர்களுக்கு பெரிய விசயமாம்.

தள்ளிப்போகும் திருமணங்கள் பற்றி ஒரு பதிவு படித்தேன். தள்ளிப்போகும் திருமணங்களுக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் பெற்றோரின் அக்கறையின்னை மற்றும் சுயநலமும் ஒரு காரணம் என்பது என் கருத்து.

பணத்தின் மீதுள்ள ஆசை எல்லா தீங்கிற்கும் காரணமாகிறது என்று படித்திருக்கிறேன். பணத்தின் மீதுள்ள ஆசை பாசத்தையும் மாற்றிவிடுகிறது. நம் பிள்ளைகளின் வாழ்க்கை வீணாவதற்கு நாமே காரணமாக இருக்கலாமா?. யோசியுங்கள் பெற்றோரே.

பிள்ளைகளும் பெற்றோரையும் கவனிக்கவேண்டும் அதே சமயம் தங்கள் வாழ்க்கைக்காகவும் சிறிது சேமித்து வைத்துக்கொள்வது நல்லது. அதேசமயம் பெற்றோரையும் மறந்துவிடக்கூடாது. அவர்களுக்கும் தேவையான அனைத்தையும் செய்யவேண்டும்.
உழைப்பது ஒருவரென்றால் அதை உழைப்பின் அருமை தெரியாமல் அனுபவிப்பது வேறோருவராக இருந்துவிடக்கூடாது.

முதிர்கன்னிகளைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கும் சமூகம் முதிர்காளைகளைப்பற்றி எப்போது சிந்திக்கப்போகிறது. ஆண் எப்போ கல்யாணம் பண்ணிட்டால் என்ன என்ற சிந்தனை வேறு.
ஆணாகயிருந்தாலும் பெண்ணாகயிருந்தாலும் சரியான வயதில் திருமணம் முடிப்பதே சிறந்தது. தாமதமாய் திருமணம் செய்துகொண்டு அப்புறம் குழந்தையில்லையே என்று வருத்தப்பட்டால் என்ன பயன்.

குழந்தையின்மை சிகிச்சைமையங்கள் தற்காலத்தில் பெருகிவிட்டன. குழந்தையின்மைக்கு பலகாரணம் இருந்தாலும் தாமதத்திருமணங்களும் ஒரு காரணம்.


சிந்தியுங்கள்.

நன்றி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.

EARN IN INTERNET - இணையத்தின் மூலம் பணம் சம்பாதியுங்கள்.

பணம் பண்ணும் வழிகள் :

பின்வரும் முன்று தளங்களின் முலம் நான் பணம் இட்டுகிறேன். இதற்கு ஜீரோ பெர்சென்ட் கூட முதலிடு தேவை இல்லை ...

முதல் தளம் - வழிமுறை ஒன்று

mobile -ல் விளம்பரம் பெறுவதன் மூலம் சம்பாதிக்க பின்வரும் தளம் உதவும். குறிப்பிட்ட அளவு பணம் சோ்ந்தவுடன் நம் முகவரிக்கு அவர்கள் cheque அனுப்பிவிடுவார்கள். ரேகிச்டேர் செய்தவுடன் ஒரு டோல்ல்ப்ரீ நம்பர் கண்பிகிரர்கள். அதற்கு டயல் செய்து விட்டு கிழ உள்ள பட்டன் கிளிக் செய்யவும். உங்களுக்கு எந்த பிரிவில் விளம்பரம் தேவையோ அதை ப்றேபிறேன்சில் தேர்தெடுக்கலாம். ஓகே வ ... இங்கே கிளிக் செய்யவும். போன் நம்பர் வெறிபி செய்வது மிக மிக முக்கியம். அதே போல் நான் என் வலை பூவில் விளம்பரம் செய்தது போல நீங்களும் உங்கள் வலைப்பூவில் இதை பற்றி விளம்பரம் செய்யவும். அப்போது நீங்கள் நிறைய சம்பாதிக்கலாம். முயற்சி திருவினையாக்கும். முலளுங்கள். வெற்றி பெறுங்கள்.

http://mGinger.com/index.jsp?inviteId=9444583152
http://mGinger.com/index.jsp?inviteId=351374










MGINGER.COM

வழிமுறை -இரண்டு
email-பெறுவதன் மூலம் சம்பாதிக்கலாம். ஈமெயில் விளம்பரம் பெறுவதன் முலம் சம்பாதிக்கலாம் .

நாம் விரும்பும் ஈமெயில்களை கிளிக் செய்து கொள்ளலாம்.

இணைக. சம்பாதிக்க ஆரம்பிக்க. வாழ்க.

RUPEEMAIL
நன்றி



வழிமுறை - முன்று

பைசா லைவ் முலம் பணம் சம்பாதிக்கலாம் . சம்பாதிக்க ஆரம்பியுங்கள் .

Hi ,

I have something interesting for you - you can easily earn regular income online via PaisaLive.com!

It’s really amazing! You get paid to open & read the contents of PaisaLive mails. You also receive special discount coupons, promotions and free passes to various events in your city.

Join now and get Rs. 99 instantly, just for joining. What more, as a special bonus you get paid for inviting your friends also!

Create your PaisaLive Account & refer your friends to earn launch referral bonus on every new registration.

http://www.PaisaLive.com/register.asp?3607393-6165560

PaisaLive - Get Paid to read emails

















வழிமுறை - நான்கு

நீங்கள் எழுதுவதை பகிருங்கள் பணம் சம்பதிங்கள்.

உங்கள் வெப்சைட் ல் உள்ளவற்றை மற்றவர்கள் படித்தால் பணம் சம்பாதிக்க முடியும்

அதற்கு பின்வரும் தளம் உதவுகிறது ஓகே

உறுப்பினர் ஆகுங்கள் .

சம்பதிங்கள்

வாழ்த்துக்கள்
http://adf.ly/?id=1220414

விளம்பரங்களை மெயில் முலம் பார்பதற்கு பணம் தருகிறது பைசளிவே தளம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் . நன்றி .

.

மருமகள்.(சிந்தனை)

கல்யாணி கல்யாணி என அழைத்துக்கொண்டே உள் நுழைந்தாள் அவள் தோழி பங்கஜம்.

என்ன பங்கஜம் என்றாள் கல்யாணி.

இருவருக்கும் 50 வயதிருக்கும். பல வருடங்களாக தோழிகள்.

சாயந்திரம் பக்கத்து வீட்டு விமலாவுக்கு நிச்சயதார்த்தமில்ல அதான் நியாபக படுத்திட்டு போலான்னு வந்தேன்.

சீக்கிரம் கிளம்பிடு.

நான் எங்கிருந்து சீக்கிரம் கிளம்பறது. எல்லா வேலையும் செஞ்சிட்டில்ல வரணும்.

அதுதான் மருமக இருக்கால்ல. அவ பார்த்துக்க போற.

அவ என்னத்த பாத்துப்பா. எல்லா வேலையும் நான்தான் செய்யனும்.

ம் எல்லாம் என் தலையெழுத்து..

கல்யாணியின் மருமகள் வசுமதி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள். கொழுந்தன் டிவி பார்த்துக் கொண்டிருக்க தானும் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவள் தானாக டிவியை ஆன் செய்வதில்லை. யாராவது பார்த்தால் கூட அமர்ந்து பார்ப்பதுதான்.

அந்த வீட்டில் எல்லாம் கல்யாணியின் ஆட்சிதான். வசுமதிக்கு வேலை செய்யக்கூடாதென்ற எண்ணமில்லை.


ஒருநாள் அப்படித்தான் சாம்பாருக்க புளி ஊற வைத்திருந்தார்கள் அவளுடைய மாமியார். வெளியில் ஏதோ முக்கியமான வேலையாக அவரின் தோழியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

அவர்கள் வருவதற்கு நேரமாகும் என்பதால் வசுமதி புளி கரைத்து ஊற்றிவிட்டாள். வந்தபின் ஏன் இப்போது ஊற்றினாய். என ஒரெ வசவுதான். காய் நல்லா வெந்தபிறகு ஊற்றனும். காய் நன்றாக வெந்துவிட்டது. ஆனாலும் அவள் குணம் அப்படித்தான்.தான்மட்டும் தான் அந்த வீட்டில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கல்யாணிக்கு.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல பல பல நிகழ்வுகள். எனவே வசுமதி ஒரு முடிவுக்கு வந்து விட்டாள். சமையல்வேலையில் தான் ஏதாவது செய்ய நினைத்தால் அது அவளின் மாமியாருக்கு பிடிக்காது. மற்ற வேலைகள் மட்டும் செய்வாள் வசுமதி. துணி துவைப்பது. பாத்திரம் கழுவுவது போன்றவை.


செய்யவும்விடமாட்டார்கள் அதே சமயம் தான்தான் எல்லா வேலையும் செய்கிறேன் யாரும் உதவி செய்வதில்லை என்று சதா புலம்பிகொண்டே இருப்பார்கள். அவர்களின் குணம் அப்படி


என்னதான் செய்வாள் வசுமதி.

அவள் கணவன் சுகுமாரும் அம்மாவுக்கு கூடமாட உதவி செய்யலாமில்லை என்பான். அவங்க என்ன எதுவும் செய்யவிடமாட்டாங்கங்க என்பாள்.

அவளுடைய கொழுந்தன்மார்களுக்கும் அண்ணிக்கு எந்த வேலையும் தெரியாது போல என்ற எண்ணம் வருமளவிற்கு செய்திருந்தாள் கல்யாணி.


மாமனார் நடேசன் தன் மனைவிக்கு எது சொன்னால் பிடிக்குமோ அதையேதான் சொல்வார். தன் மனைவிக்கு மருமகளை திட்டினால் பிடிக்கும் என்பதால் சிறு குறையையும் பெரிதுபடுத்தி பேசுவார்.

அவருக்கு தன் மனைவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே. ஏனென்றால் அங்கு கல்யாணியின் ஆட்சி அல்லவா நடக்கிறது.

கல்யாணம் ஆனதிலிருந்து இப்படித்தான். ஆனால் வசுமதியின் கொழுந்தன்கள் அப்படில்ல. அவர்களுக்கு அண்ணி என்ற பாசம் ஒரளவிற்கு இருந்தது. தன் அப்பாவே ஏதாவது தவறு செய்தால் கூட எடுத்து சொல்லுமளவிற்கு இருந்ததார்கள்.

வசுமதியின் கணவன் சுகுமாரும் மிகவும் நல்லவன். அவர்கள் வயதானவர்கள் எது சொன்னாலும் நீ பொறுமையாக இரு என்பான். வசுமதியும் அப்படித்தான் பொறுமையாக இருந்தாள். எல்லா வசவுகளையும் தாங்கிக் கொண்டாள்.

இதற்குத்தான் வேண்டாத மருமகள் கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என்று பழமொழியே உள்ளது போல.

காலம் எல்லாவிதமான காயங்களுக்கும் மருந்து என்று மனதைத்தேற்றிக் கொண்டாள் வசுமதி.


வசுமதியை மட்டுமல்ல மூத்த மருமகள் நித்யாவையும் இதேபோல நடந்துகொண்டு தனியே அனுப்பிவிட்டாள் கல்யாணி.

ஆனால் பேரன் பேத்திகளிடம் மட்டும் பாசத்தை பொழிகிறாள் அதே கல்யாணி.

உலகில் ஆயிரமாயிரம் வசுமதிகள். எந்த உறவுவாயினும் நாம் உண்மையான அன்பை பொழிந்தால் அவர்களும் உண்மையான அன்பைபொழிவார்கள். புரிந்துகொள்வார்களா கல்யாணியைப் போன்றவர்கள்.

மூத்தோர் காட்டும் வெறுப்புதான் நிறைய தனிக்குடித்தனங்கள் மற்றும் பல பிரச்சனைகள் தோன்றகாரணம். இளைய தலைமுறையையே அனைத்திற்கும் குறை சொல்லாமல் தாங்களும் தங்கள் குறைகளை திருத்திக் கொள்ளவேண்டும் மூத்த தலைமுறை.

நன்றி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

.

நேசமனம் (கவிதை)





ஓடோடி உழைத்து
பொருளீட்டி
நீங்கள் உயர
உழைத்தேன் நான்.

எமக்கென என் செய்தாய்
என கேள்விக்கணைகளுடன்
நீங்கள்

இழந்த பருவத்தை
சொல்வதா
இல்லாத பணத்தை
சொல்வதா.

எல்லாம் இருந்தும்
நிறைமனம் இல்லாமல்
குறைமனம் கொண்டு
இருப்பதேன் நீங்கள்.

சுற்றமாய் இருந்தும்
சுயநலமாய் இருப்பதேன்
பதில் தெரியா
கேள்விகளுடன் நான்.

பணபற்று பாசத்தை
பட்டுப்போக செய்கிறது
மாறுமா மனம்
ஏக்கத்துடன் நான்.

நன்றி

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

.

கிரகம்(சிறுகதை)..




ANDREW பூங்காவிற்கு சற்று நேரம் நண்பனிடம் பேசிக் கொண்டிருக்கலாம் என சென்றான்.

நண்பனையும் வரச்சொல்லியிருந்தான்.

சே இவ்வளவு நேரம் ஆச்சு இன்னும் இவனை காணலையே…

அப்போதுதான் பார்த்தான். பூங்காவில் உள்ள ஒரு பெஞ்சில் வித்தாயசமான உருவம் அமர்ந்திருப்பதை…

அதன் அருகில் சென்றான். அது இவனை பார்த்து Hello என்றது.

பார்க்க மனிதனின் சாயலும் இருந்தது அதனிடம்…

இவனும் பதிலுக்கு Hello என்றான்…

அதன் கண்கள் மிகப்பெரியனவாயிருந்தன.. நிறம் வெளிர் பச்சை நிறத்தில் இருந்தது.

நீ நீ நீங்கள் யார் என்றான் சற்று உதறியவாறே…

நான் வேற்றுகிரகவாசி என்றது.

Andrew ஆச்சர்யத்தில் ஆழ்ந்தான். உங்களுக்கு எங்கள் மொழி எப்படி தெரியும்.

எங்களுக்கு அனைத்து மொழிகளும் தெரியும். அப்படி தெரியாத பட்சத்தில் என்னிடம் உள்ள ரோபோ பதிலளிக்கும்.


ஓ அப்படியா… நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள் என்றான் Andrew.

கிரகம் விட்டு கிரகம் பாயும் ஊர்தி உள்ளது எங்களிடம் அதன்மூலம் இங்கு வந்தேன்.

எதற்காக இங்கு வந்தீர்கள். பூமி கிரகத்தை பற்றி ஆராய்வதற்காக வந்தேன்.

இவ்வளவு நேரம் பேசியதில் பயம் சிறிது தெளிந்தது.

உங்களுடைய வாகனம் எங்குள்ளது.அங்குதான் நிற்கிறது என கைகாண்பித்தான்.

அங்கு ஒரு வித்யாசமான வாகனம் நின்று கொண்டிருந்தது.
வாருங்கள் அருகே சென்று பார்ப்போம் என அழைத்து சென்றது.

Andrew வும் உடன் சென்றான். உள்ளே சென்று பார்த்தான். உடனே ஊர்தி புறப்பட்டு விட்டது.

அய்யோ என அலறினான் Andrew. என்னை எங்கே அழைத்து செல்கிறாய் என கத்தினான்.

எங்கள் கிரகத்திற்கு என்றான் cool ஆக.. எதற்காக என்றான் பதட்டம் மற்றும் பயத்துடன்.

நாங்கள் எல்லா கிரகங்களை பற்றி ஆராய்ச்சி செய்கிறோம். அதற்காக எல்லா கிரக வாசிகளும் எங்களுக்கு தேவைப்படுகிறார்கள்.

பயப்படாதே உன்னிடம் சில பரிசோதனைகள் செய்து விட்டு இன்று மாலைக்குள் உன்னை உன் கிரகத்திற்கு அனுப்பிவிடுகின்றேன்.

இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை. நான் சொல்லியிருந்தால் நீ வந்திருப்பாயா என்றான் வேற்றுகிரகவாசி.

வாகனம் அவனுடைய கிரகத்தை அடைந்துவிட்டிருந்தது. மிகப்பெரிய மாளிகைக்குள் அழைத்து சென்றான். அங்கு ஒருவன் மிகப்பெரிய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான்.

Hi Boss பூமி கிரக மனிதனை கூட்டி கொண்டு வந்துள்ளேன் என்றான்.

Very nice. அவனிடம் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிந்ததும் அவனை பூமி கிரகத்திற்கு கொண்டு வந்து விட்டான் வேற்றுகிரகவாசி. வாகனத்தை விட்டு இறங்கும்போது ஏதோ ஒரு சத்தம் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது.

என்ன சத்தம் இது என்று யோசித்தான் Andrew. Andrew வின் அம்மா alarm அடிக்குது இவ்வளவு நேரமா. எழுந்திரிக்காம இன்னும் என்னடா தூக்கம் என இவனை உலுக்கினாள்.

Andrew எழுந்தான். அட சே இவ்வளவுநேரம் தான் கண்டது கனவா என நினைத்து கொண்டே brush செய்ய சென்றான்.

நன்றி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

.

கதையல்ல உண்மை

நான் ஒருநாள் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு ரயில் ஏறுவதற்காக வந்தேன். ரயில் கிளம்பப்போகும் நேரம் ஆகிவிட்டது. அவசரமாக ஏறும் போது ஒரு பெண்மணி என் அம்மாவின் வயது இருக்கும். சீக்கிரமாக உள்ளே வாம்மா ரயில் எடுத்துட போறாங்க என்றார்கள். நானும் உள்ளே சென்று அமர்ந்து கொண்டேன்.

அப்போது ஒரு பெண் ரயில் பெட்டியில் ஏறும் இடத்தில் நின்றுகொண்டு தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தாள். அந்த பெண்ணையும் சீக்கிரம் உள்ளே வாம்மா ரயில் எடுத்துவிடப்போறாங்க என்று சொன்னார்.

அந்த பெண்ணின் நலத்திற்காகதான் அவர்கள் சொன்னார்கள். ஆனால் அந்த பெண்ணோ எனக்கு எல்லாம் தெரியும் நீ ஒண்ணும் சொல்ல வேணாம் என்றாள். வார்த்தைகளில் மரியாதை இல்லவே இல்லை.

அவர்கள் நீ உங்க அம்மா நம்பரைத்தா நீ இப்படி செய்கிறாய் என அவர்களிடம் சொல்கிறேன் என்றார்கள். உடனே அந்த பெண்ணோ ஆவேசமாக என் அம்மாவிடம் சொல்லுவியா இந்த சொல் என செல்போனை அந்த அம்மாவின் மீது வீசினாள். தன் வயது ஒத்த பெண்களிடம் பேசுவது போல் வாடி போடி என்றுதான் அவள் பேசினாள்.

இதை பார்த்த மற்றவர்கள் அந்த அம்மாவிற்காக பரிந்து பேசினார்கள். அந்த பொண்ணுக்கு என்ன ஆன உங்களுக்கு என்னம்மா. விட்டுடுங்க. நல்லது சொன்ன புரிஞ்சுக்கனும். புரிஞ்சிக்காதவங்க கிட்ட சொல்லி என்ன செய்ய என்று சொன்னார்கள். அந்த பொண்ணையும் திட்டினார்கள். அப்போதுதான் அந்த பெண்ணின் ஆவேசம் அடங்கியது. ஆனாலும் தன் தவறை உணர்ந்தாள் இல்லை. இத்தனைக்கும் அந்த பெண் நன்கு படித்து வேலைக்கு போய் கொண்டிருக்கும் பெண்தான். என்ன படித்து என்ன பண்பாடு இல்லை. நான் அடிக்கடி அந்த பெண்ணை பார்ப்பேன். பார்க்கும்போது என்னுள்ளே அந்த சம்பவம்தான் நினைவுக்கு வரும். வெறுப்பாகவும் இருக்கும். நல்லதே செய்தாலும் அதை
புரிந்து கொள்ள மனம் இல்லாமல் இருப்பவர்களும் இருக்கின்றார்கள் இந்த உலகத்தில் என்ன செய்ய?

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

நன்றி

.

36500 நாட்கள்…





நண்பர்களே அது என்ன 36500 நாட்கள் என்றுதானே எண்ணுகீறிர்கள். வேறொன்றுமில்லை. ஒரு மனிதனின் அதிக பட்ச வாழ் நாட்கள் தான் 36500 நாட்கள். அதாவது ஒரு மனிதன் 100 ஆண்டுகள் வாழ்வேனேயானால் அவன் மொத்த வாழ்நாட்களின் எண்ணிக்கை 36500 நாட்கள். 100 x 365 =36500

ஆனால் 100 வருடங்கள் அனைவரும் வாழ்கின்றனரா என்றால் அது கேள்விக்குறிதான். ஆனால் இந்த குறுகிய வாழ்நாட்களில் எத்துணை எத்துணை பகைமைகள் போர்கள். அவனை அழிக்க வேண்டும் இவளை முன்னேற விடக்கூடாது என்ற தீய எண்ணங்கள் அப்பப்பா………

எல்லோரும் பிறந்தோம் வாழ்கிறோம். செத்துப்போகப்போகிறோம் இது அனைவருக்குமே தெரிந்த உண்மை. இது அறிந்திருந்தும் இந்த குறுகிய வாழ்நாட்களை கூட சிறப்பாக மகிழ்ச்சியாக வாழவிடாமல் மனிதர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எத்தணை.எத்துணை.

இதை வாசிப்பவர்கள் பெரும்பாலோனோர் வாங்கும் ஒரு மாத சம்பளத்தை விட நம் வாழ்நாட்களின் எண்ணிக்கை மிகக்குறைவுதான்.

இதில் நாம் எத்துணை நாட்கள் வாழ்ந்து முடித்து விட்டோம் என கணக்கு போட்டு பார்த்து கொள்ளலாம். நான் 11000 நாட்களை வாழ்ந்து முடித்துவிட்டேன். மீதி எவ்வளவு நாட்கள் என்பது விதியின் மதியை பொருத்தது. ஏன் நாம் எவ்வாறு நம் உடலை பேணுகிறோம் என்பதையும் பொருத்தது.

இதை வாசிக்கிற ஒவ்வொருவரும் வெறுப்பையும் தீய எண்ணங்களையும் விரட்டுவோம். குறுகிய வாழ்நாளில் நிறைவாய் வாழ்வோம்.

அன்னை தெரசா – மனிதர்களை நீங்கள் மதிப்பீடு செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால் அவர்களை நேசிப்பதற்கு நேரம் இல்லாமல் போய்விடும் என்று கூறியிருக்கிறார்.

இதை எழுதும் நான் எல்லாரையும் நேசிக்கிறேனா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். நேசிக்காவிட்டாலும் நேசிக்க முயற்சியாவது செய்வோம். அன்பு செய்வது போல நடித்தால் கூட அது காலப்போக்கில் உண்மை அன்பாக மாறக்கூடும். ஏனென்றால் நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாற்றம் பெறுகிறாய். நீங்கள் தினமும் செய்யும் செயல்கள் பழக்கங்களாக உருவெடுக்கின்றன.

உதாரணத்திற்கு சிகரேட் பிடிக்கும் பழக்கத்தை விடவேண்டும் என்று நினைப்பவர்கள் சிகரேட் பிடிக்கும் எண்ணம் எழும்போதெல்லாம் பழச்சாறு அல்லது சாக்லேட் சாப்பிடலாம். 30 நாட்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டால் பழக்கமாக மாறிவிடும்.
உடல்நலத்திற்கும் கேடு இல்லை. வாழ்நாளையும் நீட்டிக்கலாம். இன்பமாக வாழலாம்.

குறுகிய வாழ்நாளை சிறப்புற வாழ்வோம். நம்மை பற்றி நினைக்கும் போது பிறருக்கு இனிமையாக இருக்கும் அளவிற்கு நாம் நடந்து கொள்வோம்.

நன்றி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

.

Blog Archive