தாய் தரும் தவறான அறிவுரை.

ஒருசில அம்மாக்கள் திருமணம் ஆனவுடன் தங்கள் மகள்களின் வாழ்வில் தேவையில்லாமல் தலையிட்டு பிரச்சினையை பெரிதாக்குகின்றனர். பிரச்சினையே இல்லாவிட்டாலும் புதிதாக உண்டுபண்ணுகின்றனர். நல்ல உறவுகளே கிடைத்தாலும் ஒரு சிலர் அதை புரிந்து கொள்ளாமல் அலட்சியப்படுத்துகின்றனர். தாய் தந்தையரே நிரந்தரம் அல்ல. எல்லா உறவுகளும் நமக்கு தேவைதான். அதை நிறைய பேர் உணர்வதில்லை.

கணவனின் உறவினர்கள் நம் மீது கொண்டுள்ள அன்பை நிறைய பேர் புரிந்துகொள்வதேயில்லை. நம் அம்மாவே தவறான அறிவுரை கூறினாலும் மகள் ஆனவள் சிந்தித்து நல்ல முடிவை எடுக்கவேண்டும். தன் குடும்ப விவரங்களை வெளியில் சொல்வது நல்லதல்ல. நிறைய திருமணமான பெண்கள் இதை கடைபிடிப்பதில்லை.

நல்ல கணவனை தவறான அறிவுரைகளால் இழந்தவர்கள் ஏராளம். உறவு வட்டங்கள் விலகிப்போவதும் இதனால்தான். சிறிய மனக்கசப்பு பெரிய பிரச்சனையாகி ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத நிலை உருவாகி தன் உடன்பிறப்புகளையே பல ஆண்டுகள் பார்க்காத பேசாத நிலை சில இடங்களில் உள்ளது. சிந்திப்போம். நாம் நம்மையே மாற்றிக்கொள்வோம். என் மனதில் பட்டதை நான் சொல்லி உள்ளேன். மாற்று கருத்து உடையோர் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

2 comments:

எல் கே said...

arumai

Robin said...

நியாயமான கருத்து.
இப்போதெல்லாம் பல குடும்பங்களில் இப்படித்தான் நடக்கிறது.