அன்பு குறைபாடும் குற்றங்களும்

அன்பு குறைந்திருக்கும்போது குற்றங்கள் பெரிதாகப்படுகின்றன. நாம் அன்பு செய்கிறவர்கள் ஏதாவது தவறு செய்தார்கள் என்றால் கூட நாம் அதை மிகைப்படுத்தமாட்டோம். ஆனால் நாம் அன்பு செய்யாதவர்கள் சிறு தவறு செய்தாலும் கூட அதைபெரிதுபடுத்தி பேசுவோம்.

இதை உறவுமுறைகளிலும் காணலாம். நம் மகனோ பேரன் பேத்தியோ எது செய்தாலும் சரி என கருதும் நாம் நமக்கு பிடிக்காத மற்ற உறவினர்கள் சரியாகவே செய்தாலும் அதை தவறு என்று கூறுவோர் உள்ளனர். காரணம் அன்பு குறைபாடே ஆகும்.

இயேசு தன்னைக்கொன்றவர்களை கூட மன்னித்து ”தாம் செய்வது இன்னது என்று அறியாமல் செய்கிறார்கள்” என்றார்.
இது அன்பின் மிகுதியைகாட்டுகிறது.

அன்னைத் தெரசா தனக்கு சம்பந்தமே இல்லாதவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து காத்துவந்தார். இதுவும் அன்பின் மிகுதியான நிலை.

வள்ளலார் வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்றார். பயிர் வாடுவதையே பொருக்காத வள்ளலார் எங்கே. மனிதர்களின் மனங்களை வாட செய்து சந்தோசம் அடையும் நாம் எங்கே.

நிறைய பிரச்சனைகள் தோன்றுவதற்கு இந்த அன்பு குறைபாடே காரணம். அன்பு குறைபாட்டை நீக்கி அன்பை பெருக்கி கொள்வோம்.