நலம் தரும் மருத்துவம்

எய்ட்சை தடுக்கும் வாழைப்பழம்.



முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பல்வேறு நன்மைகளைத் தரக்கூடியது. எளிதில் ஜிரணம் ஆகும். இதில் எய்ட்ஸ் நோயைத் தடுக்கும் சக்தி இருப்பதாக அமெரிக்கா ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வாழைப்பழங்களில் லேக்டின் என்னும் ஒருவகைப்புரதம் உள்ளது. இது எய்ட்ஸ் கிருமியான எச்.ஐ.வி வைரசை ஒழிக்கும் தன்மை உடையது. தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் லேக்டின் புரதம் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும். அத்துடன் எச்.ஐ.வி கிருமி உட்புகுந்தால் அவற்றை சூழ்ந்து ஒரு உறையை ஏற்படுத்தி செயல் இழக்கச் செய்யும் ஆற்றலையும் லேக்டின் தருகிறது.

புற்றுநோயின் எதிரி பப்பாளி.


எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் பழவகையில் ஒன்று பப்பாளி. இதில் புற்றுநோய்கான எதிர்ப்பு மருந்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுட உள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள். வாய் தொண்டை கல்லீரல் நுரையீரல் இரப்பை மூளை என பல உறுப்புகளையும் பாதிக்கும் வெவ்வேறு வகை புற்றுநோய்கள் இருக்கின்றன.

மருத்துவர்களுக்கு சவாலான வியாதிகளில் புற்றுநோயும் ஒன்று. இதற்கு சாதாரண பப்பாளி இலைச்சாற்றில் எதிர்ப்பு மருந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. பப்பாளி இலைகளில் புற்றுநோய் வைரஸ்களை எதிர்க்கும் டி.எச்.1 டைப் சைடோகின்ஸ் என்னும் மூலக்கூறுகள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து புற்றுநோய் தீவிரத்தை கட்டுக்குள் வைக்கிறது.

புளோரிடா பல்கலைக்கழக ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

3 comments:

அண்ணாமலையான் said...

பழம் பலம் தரும்

Jerry Eshananda said...

பயனுள்ள தகவல்.

Unknown said...

நன்றி அண்ணாமலையான்,ஜெரி ஈசானந்தன்.