நிறை குறை

குறை நிறையுடன் ஏற்றுக்கொள்
உறவுகளை
குறைகளை சுட்டிக்காட்டி
நிறைகளை மறவாதே...
இது அன்பை குறைக்கும்
பாராட்டி பண்புடன்
வாழ்..
கோபம் குடும்பத்தை சிதைக்கும்
மறவாதே மனம் திருந்து...

அன்பை மாற்றும் சுயநலம்





ஓடோடி உழைத்து
பொருளீட்டி
நீங்கள் உயர
உழைத்தேன் நான்.

எமக்கென என் செய்தாய்
என கேள்விக்கணைகளுடன்
நீங்கள்

இழந்த பருவத்தை
சொல்வதா
இல்லாத பணத்தை
சொல்வதா.

எல்லாம் இருந்தும்
நிறைமனம் இல்லாமல்
குறைமனம் கொண்டு
இருப்பதேன் நீங்கள்.

சுற்றமாய் இருந்தும்
சுயநலமாய் இருப்பதேன்
பதில் தெரியா
கேள்விகளுடன் நான்.

பணபற்று பாசத்தை
பட்டுப்போக செய்கிறது
மாறுமா மனம்
ஏக்கத்துடன் நான்.

நன்றி

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

மருமகள் என்கிற மகள்....

கல்யாணி கல்யாணி என அழைத்துக்கொண்டே உள் நுழைந்தாள் அவள் தோழி பங்கஜம்.

என்ன பங்கஜம் என்றாள் கல்யாணி.

இருவருக்கும் 50 வயதிருக்கும். பல வருடங்களாக தோழிகள்.

சாயந்திரம் பக்கத்து வீட்டு விமலாவுக்கு நிச்சயதார்த்தமில்ல அதான் நியாபக படுத்திட்டு போலான்னு வந்தேன்.

சீக்கிரம் கிளம்பிடு.

நான் எங்கிருந்து சீக்கிரம் கிளம்பறது. எல்லா வேலையும் செஞ்சிட்டில்ல வரணும்.

அதுதான் மருமக இருக்கால்ல. அவ பார்த்துக்க போற.

அவ என்னத்த பாத்துப்பா. எல்லா வேலையும் நான்தான் செய்யனும்.

ம் எல்லாம் என் தலையெழுத்து..

கல்யாணியின் மருமகள் வசுமதி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள். கொழுந்தன் டிவி பார்த்துக் கொண்டிருக்க தானும் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவள் தானாக டிவியை ஆன் செய்வதில்லை. யாராவது பார்த்தால் கூட அமர்ந்து பார்ப்பதுதான்.

அந்த வீட்டில் எல்லாம் கல்யாணியின் ஆட்சிதான். வசுமதிக்கு வேலை செய்யக்கூடாதென்ற எண்ணமில்லை.


ஒருநாள் அப்படித்தான் சாம்பாருக்க புளி ஊற வைத்திருந்தார்கள் அவளுடைய மாமியார். வெளியில் ஏதோ முக்கியமான வேலையாக அவரின் தோழியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

அவர்கள் வருவதற்கு நேரமாகும் என்பதால் வசுமதி புளி கரைத்து ஊற்றிவிட்டாள். வந்தபின் ஏன் இப்போது ஊற்றினாய். என ஒரெ வசவுதான். காய் நல்லா வெந்தபிறகு ஊற்றனும். காய் நன்றாக வெந்துவிட்டது. ஆனாலும் அவள் குணம் அப்படித்தான்.தான்மட்டும் தான் அந்த வீட்டில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கல்யாணிக்கு.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல பல பல நிகழ்வுகள். எனவே வசுமதி ஒரு முடிவுக்கு வந்து விட்டாள். சமையல்வேலையில் தான் ஏதாவது செய்ய நினைத்தால் அது அவளின் மாமியாருக்கு பிடிக்காது. மற்ற வேலைகள் மட்டும் செய்வாள் வசுமதி. துணி துவைப்பது. பாத்திரம் கழுவுவது போன்றவை.


செய்யவும்விடமாட்டார்கள் அதே சமயம் தான்தான் எல்லா வேலையும் செய்கிறேன் யாரும் உதவி செய்வதில்லை என்று சதா புலம்பிகொண்டே இருப்பார்கள். அவர்களின் குணம் அப்படி


என்னதான் செய்வாள் வசுமதி.

அவள் கணவன் சுகுமாரும் அம்மாவுக்கு கூடமாட உதவி செய்யலாமில்லை என்பான். அவங்க என்ன எதுவும் செய்யவிடமாட்டாங்கங்க என்பாள்.

அவளுடைய கொழுந்தன்மார்களுக்கும் அண்ணிக்கு எந்த வேலையும் தெரியாது போல என்ற எண்ணம் வருமளவிற்கு செய்திருந்தாள் கல்யாணி.


மாமனார் நடேசன் தன் மனைவிக்கு எது சொன்னால் பிடிக்குமோ அதையேதான் சொல்வார். தன் மனைவிக்கு மருமகளை திட்டினால் பிடிக்கும் என்பதால் சிறு குறையையும் பெரிதுபடுத்தி பேசுவார்.

அவருக்கு தன் மனைவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே. ஏனென்றால் அங்கு கல்யாணியின் ஆட்சி அல்லவா நடக்கிறது.

கல்யாணம் ஆனதிலிருந்து இப்படித்தான். ஆனால் வசுமதியின் கொழுந்தன்கள் அப்படில்ல. அவர்களுக்கு அண்ணி என்ற பாசம் ஒரளவிற்கு இருந்தது. தன் அப்பாவே ஏதாவது தவறு செய்தால் கூட எடுத்து சொல்லுமளவிற்கு இருந்ததார்கள்.

வசுமதியின் கணவன் சுகுமாரும் மிகவும் நல்லவன். அவர்கள் வயதானவர்கள் எது சொன்னாலும் நீ பொறுமையாக இரு என்பான். வசுமதியும் அப்படித்தான் பொறுமையாக இருந்தாள். எல்லா வசவுகளையும் தாங்கிக் கொண்டாள்.

இதற்குத்தான் வேண்டாத மருமகள் கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என்று பழமொழியே உள்ளது போல.

காலம் எல்லாவிதமான காயங்களுக்கும் மருந்து என்று மனதைத்தேற்றிக் கொண்டாள் வசுமதி.


வசுமதியை மட்டுமல்ல மூத்த மருமகள் நித்யாவையும் இதேபோல நடந்துகொண்டு தனியே அனுப்பிவிட்டாள் கல்யாணி.

ஆனால் பேரன் பேத்திகளிடம் மட்டும் பாசத்தை பொழிகிறாள் அதே கல்யாணி.

உலகில் ஆயிரமாயிரம் வசுமதிகள். எந்த உறவுவாயினும் நாம் உண்மையான அன்பை பொழிந்தால் அவர்களும் உண்மையான அன்பைபொழிவார்கள். புரிந்துகொள்வார்களா கல்யாணியைப் போன்றவர்கள்.

மூத்தோர் காட்டும் வெறுப்புதான் நிறைய தனிக்குடித்தனங்கள் மற்றும் பல பிரச்சனைகள் தோன்றகாரணம். இளைய தலைமுறையையே அனைத்திற்கும் குறை சொல்லாமல் தாங்களும் தங்கள் குறைகளை திருத்திக் கொள்ளவேண்டும் மூத்த தலைமுறை.

நன்றி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.