அன்றும் இன்றும்

ஏங்க இங்க பாருங்க உங்களத்தான்

என்ன என்றான் சுகுமார்.

பக்கத்து வீட்டு மாலா நிலம் வாங்கிட்டாங்க. பெரிய ரியல் எஸ்டேட் வியாபாரிகிட்டங்க. முதல்ல லட்சம் ரூபா கட்டினாப் போதுமாம். அப்புறம் மாசாமாசம் தவணைல கட்டலாமாம் நல்ல திட்டமா இருக்குங்க. நாமாளும் வாங்கலாங்க.

இப்ப லட்ச ரூபாய்க்கு எங்க போறது.

கடனை கிடனை வாங்கி வாங்கலாங்க. கடன் என்ற வார்த்தையே பிடிக்காது சுகுமாருக்கு.

அதல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது. வாங்கறதார்ந்த மொத்தகாசும் குடுத்து வாங்கனும். சும்ம தொண தொணங்கதா.

நான் சொல்லி எத நீங்க கேட்டு இருக்கீங்க. ம் எல்லாம் என் தலையெழுத்து.

இதைச்சொல்லிசொல்லியே புலம்பிக்கொண்டிருந்தாள் 3 மாதகாலமாக.

சுகுமார் அன்று லேட்டாக வீட்டிற்கு வந்தான்.

என்னங்க உங்களுக்க விசயம் தெரியுமா?

என்ன என்றான்.

அந்த REAL ESTATE வியாபாரி மொத்த பணத்தையும் சுருட்டிட்டு ஓடிட்டானாங்க. TV News ல சொன்னாங்க.

நல்லவேல நாம தப்பிச்சோம். வாங்கியிருந்தா 1 லட்சரூபா போயிருக்கும் என்றாள். நீங்க வாங்கவேணா சொன்னது நல்லதாப்போச்சு என்றாள் சந்தோசமாக.

முற்றும்

நன்றி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

1 comment:

அண்ணாமலையான் said...

ரைட்டு... தப்பிச்சா சரி