உண்மை உங்களுக்காக

நேற்று சொல்வதெல்லாம் உண்மையில் ஒரு கதை பார்த்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 14 வருடங்களுக்கு முன் ஒரு ஜோடி காதல் திருமணம் செய்து கொண்டுள்ளது.

அவர்களின் அன்பின் சாட்சியாக 3 குழந்தைகள். ஒரு குழந்தை இறந்து விட்டது.

இப்போது இருப்பது ஆண் ஒன்று பெண் ஒன்று என இரண்டு குழந்தைகள்.

அந்த ஆணுக்கு இப்போது இன்னொரு பெண்ணுடன் கள்ளதொடர்பு.

அந்த பெண்ணும் திருமணமானவள்.

இப்போது இது போன்ற ஒழுக்கக் கேடுகள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. 

அவர்கள் செய்த காதலின் பயன் தான் என்ன.

எத்தனை பேரை வேண்டுமென்றாலும் ஒரு ஆண் காதலிக்க முடியுமா?

இதற்கு வரைமுறை ஒன்றும் கிடையாதா?

இவை விடை தெரியாத கேள்விகள்.

நம்மால் முடிந்த வரை இது போன்ற ஒழுக்கக் கேடுகள் இல்லாத வண்ணம் நாம் வாழ்க்கை வாழுவோம். 

அப்போது நமது சமுதாயம் சிறிது சிறிதாக ஒரு மாற்றத்திற்கு வரும். ஏற்றம் பெறும். 

ஒருவனுக்கு ஒருத்தி என்பதே உயர்ந்த கொள்கை. 

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
 

No comments:

Blog Archive