காதலிக்க நேரமில்லை(சிறுகதை)…

@@@@@@என் முதல் சிறுகதை@@@@@@@

புவனா அங்க என்னடி பண்ணற?

சீக்கிரம் கிளம்பு… ஆபிசுக்கு டைம் ஆச்சு…

சூடா இட்டிலியும் வெங்காய சட்டினியும் வச்சுருக்கேன். சாப்பிட்டுட்டு லஞ்ச் பேக்கை எடுத்துட்டு போ.

ம் சரிம்மா…

புவனா அடையாரில் கணிப்பொறி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறாள்.

அங்கே புதிதாக வேலைக்கு சோ்ந்திருந்தான் ராசா. இவள் team அல்ல அவன் வேற ஒரு PHP project ல் வேலை பார்க்கிறான்.

அவன் அடிக்கடி இவளையே பார்ப்பது போன்று இவளுக்கு தோன்றியது.

ஒருநாள் Intranet Chat ல் hi…. என்று message அனுப்பினான்…

இவளும் பதிலுக்கு hi என்று அனுப்பினாள்.

Chat window ல் busy என்று set செய்து விட்டு தன் project work பார்க்க தொடங்கினாள் புவனா…


வேலை முடித்துவிட்டு 8 மணிக்கு வீட்டிற்கு போவதற்காக பஸ் ஸ்டான்டில் wait செய்து கொண்டிருந்தாள் புவனா..

அங்கே ராசாவும் வந்தான் hi என்றான். பதிலுக்கு hi என்றாள். உடனே தான் செல்ல வேண்டிய பேருந்து வந்ததால் ஓடி போய் அதில் ஏறிக் கொண்டாள்.

அவளுக்கு ஒரே குழப்பம் ஏன் இவன் தன்னையே அடிக்கடி பார்க்கிறான் பின் தொடர்கிறான் என்று…

அடுத்த நாள் வேலையை முடித்து விட்டு பேருந்துக்காக நின்று கொண்டிருந்தாள் புவனா..

ராசா வந்தான். உங்ககிட்டே கொஞ்சம் பேசனும் என்றான்.

சொல்லுங்க என்றாள் புவனா மனதில் பயத்தோடு….

எங்க team ல எல்லாரும் வேற வேற மாநிலத்தை சோ்தவங்க இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் பேசறாங்க…

நான் கிராமத்தை சோ்ந்தவன்றதால இந்தியும் தெரியாது English ம் fluent ஆக பேச வராது அதனால உங்களுக்கு free time கிடைக்கும் போது என்னோடு Intranet la English la chat பண்ணிங்கன்னா நானும் English நல்ல develop பண்ணிப்பேன். நீங்க பெரிய கான்வென்ட்ல படிச்சீங்கன்னு கேள்விப்பட்டேன் என்றான்.

Ok sure என்றாள் புவனா… பேருந்து வந்தது Bye சொன்னாள் உற்சாகமாக அப்படியே மனதுக்குள் தன்னைத்தானே திட்டிக்கொண்டாள். சின்ன விசயத்தை தான் என்னவோ ஏதோ என்று கற்பனை செய்து கொண்டதை நினைத்து.…..

நன்றி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.!
.

2 comments:

அண்ணாமலையான் said...

ஏன் இப்படி?

Unknown said...

ஏன் நன்றாக இல்லையா? ....அண்ணாமலையான் அவா்களே....