பயனுள்ள குறிப்புகள்…

@@@@@@எனக்கு தெரிந்த சில குறிப்புகள்@@@@@@@

மீன் சாப்பிட்டுவிட்டு பாலோ பால் சார்ந்த பொருள்களோ சாப்பிடக்கூடாது.(வெண் குட்டம் நோய்) ஏற்பட இதுவும் ஒரு காரணம்.


பச்சை மிளகாய் வாங்கியதும் அதன் காம்பை கிள்ளி விடவேண்டும் அப்போது நிறைய நாட்கள் இருக்கும்.


தனியா துள் மாவு அரைக்கும் இயந்திரத்தில் கொடுத்து அரைக்கும்போது அதனுடன் பச்சரிசி சிறிதளவு (1 கிலோவிற்கு 1 ஆழாக்கு ) துவரம்பருப்பு 1 ஆழாக்கு சமையலுக்கு உபயோகப்படுத்தும் மஞ்சள் கிழங்கு 200 கிராம் சீரகம் 100 கிராம் மிளகு 100 கிராம் உடைத்த கடலை 100 கிராம் சோம்பு 100 கிராம் போட்டு அரைத்துக்கொண்டால் குழம்பு மிகவும் தண்ணியாக இல்லாமல் நன்றாக கெட்டியாக வரும். ருசியாகவும் இருக்கும். பச்சரிசியையும் துவரம்பருப்பையும் வறுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து குழம்புவகைகளுக்கும் உபயோகிக்கலாம்.


மிளகாய் துளை தனியாகவும் தனியா தூளை தனியாகவும் அரைத்து வைத்துக்கொண்டால் தனித்தனியாக உபயோகப்படுத்த சிறப்பாக இருக்கும்.(எங்கள் வீட்டில் அவ்வாறுதான் அரைப்போம்).


கோழிக்கறியை சமைத்த அன்றே சாப்பிடுவது நன்று.

சாப்பிடுவதற்கு 15 நிமிடம் முன் சிறிதளவு வெந்நீர் அருந்துவது நல்லது. உடல் எடை குறையும் உணவின் அளவும் குறையும்.

சப்பாத்திக்கு மாவு பிசையும்போது பால் அல்லது தயிர் சோ்த்து பிசைந்தால் மிருதுவாக இருக்கும். மாவு பிசைந்தவுடன் செய்யாமல் சிறிது நேரம் கழித்து சப்பாத்தி செய்யவேண்டும்.


மாகியுடன் முட்டை சோ்த்து செய்தால் சுவையாக இருக்கும்.

சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும் போது மஞ்சள்துள் சிறிதளவு வெந்தயம் சிறிதளவு சோ்த்துக் கொள்ளவேண்டும். (மஞ்சள்தூளை உணவில் சோ்த்துக் கொண்டால் பன்றிக்காய்ச்சல் வராது என்று படித்த ஞாபகம்)


நன்றி.


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.!

.

No comments: