அந்தரங்கம் (1)

நான் வாரமலர் பகுதியில் அன்புடன் அந்தரங்கம் பகுதியை விரும்பிப் படிப்பேன். அதில் இந்த வாரம் வந்த கடிதம் உங்களுடன் பகிர்க்கிறேன். ஒரு பெண் எழுதிய கடிதம் அது. அவள் அவளின் அக்கா கணவனின் தம்பியை விரும்புகிறாளாம். அவன் இவளை விரும்பவில்லை. இன்னொரு பெண்னை விரும்பினான். அந்த காதல் கைகூடாமல் மறுபடியும் இன்னொரு காதலில் விழுந்தான். அந்த காதலும் கைகூடவில்லை. பின்பு இவளை விரும்புவதாக கூறியுள்ளான். ஆனால் அதை கூறியவுடன் 1 வாரம் இவளுடன் பேசவில்லை.

பின்பு இவளிடம் என்னை காதலனாக வேண்டுமானால் நினைத்துக்கொள் இல்லையென்றால் அண்ணனாக நினைத்துக் கொள் என்றானாம்.

எப்படி இருக்கிறது பாருங்கள் கதை. சகுந்தலா கோபிநாத் அவர்கள்இப்படிப் பட்டவனை நம்ப வேண்டாம் என்று கூறினார்கள்.

மலர் விட்டு மலர் தாவும் வண்டு அவன் என்று கூறினார்கள். மிகச்சிறந்த ஆலோசனை..


No comments: