விரும்பிப் படித்தது(3)

தபால் தலையைச் சுற்றி ஓட்டைகள் காணப்படுகிறதே, இவை எப்படி தோன்றின? நுற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் நகரத்தில் ஒரு சத்திரத்தில், பத்திரிகை நிருபர் ஒருவர் உட்கார்ந்து அன்றைய செய்திகளை எழுதி முடித்தார். வெளியுர் பத்திரிகைகளுக்கு அந்த செய்திகள் உடனடியாக போய் சேர வேண்டும். எழுதியவற்றை அந்த நிருபர் அவசரம் அவசரமாக உறைகளில் போட்டு வாயை ஒட்டினார்.

பையிலிருந்து நீண்ட அகலமான காகிதத்தை எடுத்தார். அவை அத்தனையும் தபால் தலைகள் தனித்தனியாக கிழிப்பதற்கு கத்தயைத் தேடினார். கத்தி கிடைக்கவில்லை. குண்டூசி தான் கிடைத்தது. கோணல் மாணலாக கிழித்தார்.

சத்திரத்தில் இருந்த ஒருவர் அந்த நிருபர் பட்ட பாட்டையெல்லாம் கவனித்தார். தபால் தலைகளை சுற்றிலும் ஓட்டைகள் இருந்தால் சுலபமாக கிழிக்க முடியும் என எண்ணினார். அவர் இயந்திரம் ஒன்றை ஓட்டை போட தயாரித்தார். அந்த இயந்திரத்தின் பயனை எண்ணி பிரிட்டிசு தபால் துறை அந்த இயந்திரத்தை அவரிடம் இருந்து விலை கொடுத்து வாங்கியது.

இதுதான் தபால் தலை ஓட்டையின் கதை................

No comments: