தயிர் சாப்பிடும் போட்டி - பரிசு வென்ற ஆசிரியர்

பீகார் மாநிலத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, சனவரி பிப்ரவரி மாதங்களில் தயிர் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நம்ம ஊரில் பொங்கல் பண்டிகையின் போது சல்லிக்கட்டு நடத்தப்படுவது போல் அங்கு இந்த போட்டி நடத்தப்படுகிறது. சில இடையுறுகளால் கடந்த சில் ஆண்டுகளாக போட்டி நடத்தவில்லை.

சென்ற ஆண்டு போட்டியை எப்படியும் நடத்திவிட பேண்டும் என்ற எண்ணத்தில் பாட்னாவில் உள்ள ஒரு கல்லுரி நிர்வாகம் கடும் முயற்சி மேற்கொண்டது இதன்படி கல்லுரியல் உள்ள மாணவர்கள் பேராசிரியர்கள் ஊழியர்கள் போட்டியாளர்களாக வைத்து போட்டி நடத்தப் பட்டது. இதில் 300 பேர் பங்கேற்றனர். இறுதியாக அசய் குமார் என்ற கணிதவியல் துறை பேராசிரியர் 15 நிமிடங்களில் மூன்று கிலோ தயிரை சாப்பிட்டு வெற்றி கோப்பையை தட்டிச் சென்றார். கல்லுரி நுலகர் 2 வது பரிசை பெற்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் கல்லுரியில் அசய் குமாரை தயிர் வண்டிப் பேராசிரியர் என்று தான் செல்ல பெயரிட்டு அழைக்கின்றனர்.

No comments: