விரும்பிப் படித்தது(2)

உலகின் மிக வயதான தந்தை

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி ஒருவர். உலகின் வயதான தந்தை என்ற பெருமையை பெற்றுள்ளார். இவரது பெயர் கரம்சித் ராகவ். வயது 94. இவரது மனைவி சகுந்தலாவிற்கு 59 வயதாகிறது. இவர்களுக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மிகவும் வயதான தந்தைக்கு பிறந்தாலும், அந்த குழந்தை மற்ற குழந்தைகளைப் போல் ஆரோக்கியமாகவே உள்ளது. இந்த தள்ளாத வயதில் எப்படி உங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடிந்தது. என கரம்சித் காலையில் எழுந்தவுடன் மூன்று லிட்டர் பால் குடிப்பேன்.

புரோட்டா, சப்பாத்தி, அரிசி சாதம் இவற்றையும் பதம் பார்ப்பேன். கண்டிப்பாக தினமும் உணவில் அரை கிலோ நெய் சேர்த்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார். இன்னும் பத்தாண்டுகள் என் மகனுடன் விளையாடுவேன். இன்னொரு குழந்தை பெற்றுக் கொண்டாலும் ஆச்சர்யப்பட தேவையில்லை. அந்த அளவிற்கு உடல் ஆரோக்கியத்துடன் உள்ளேன் என்கிறார் இந்த தாத்தா.

இது எப்படி இருக்கு. நீங்களும் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் வியப்பாக தான் உள்ளது... ...ம்...!!!

Unknown said...

ஆமாம் தனபாலன் அவர்களே வியப்பாகத்தான் உள்ளது.