பயம்

கவிதாவிற்கு மிகவும் பயமாகயிருந்தது. தமிழ் ஆசிரியர் இன்று 10 திருக்குறளை மனப்பாடம் செய்யசொல்லியிருந்தாள்.

கவிதா அவற்றை மனப்பாடம் செய்ய மறந்துபோனாள். டிவி பார்த்துகொண்டு இருந்ததில் படிக்கவேயில்லை.

3வது பீரியட் தமிழ். முதல் 2 பீரியட் முடிந்து தமிழ் ஆசிரியரும் வந்து விட்டார். ஒவ்வொருவராக ஒப்பிக்கவும் சொல்லி ஒப்பித்துகொண்டிருந்தனர். மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டிருந்தார் தமிழ் ஆசிரியை. கவிதாவிற்கு ஒரே ஒரு குறள் மட்டும் நன்றாக தெரியும்.

மாலதியை ஒப்பிக்கசொன்னார். அவள் 5 குறளை சொன்னாள். அவளை அமர சொல்லிவிட்டு கவிதாவிடம் ஒப்பிக்க சொல்லி சொன்னார் தமிழ் ஆசிரியை. 6 வது குறளை சரியாக மிக விரைவாக சொன்னாள் கவிதா.

தமிழாசிரியர் இவ்வளவு விரைவாக சொல்கிறாயே அப்படி என்றால் நீ எல்லாவற்றையும் நன்றாக படித்திருப்பாய் உட்கார் என கூறிவிட்டார்.

நிம்மதி பெருமூச்சுவிட்டாள் கவிதா.

1 comment:

Unknown said...

இது என் வாழ்வில் நிசமாக நடந்தது.