செயல்விளைவு

முகிலன் தன் இருக்கையில் அமர்ந்திருந்தான். இன்று நேர்முகத்தேர்வுக்கு ஆட்களை தேர்தெடுக்கவேண்டும்.

பத்துபேர் தேர்வுக்கு வந்திருந்தனர்.

ஒவ்வொருவராக அழைத்து கேள்விகளைக்கேட்டுக்கொண்டிருந்தான்.

5 பேர் முடிந்துவிட்டது. 6 வது நபரை கூப்பிட்டான். உள்ளே நுழைந்த பெண்ணை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தான்.

யாரைத் தன் வாழ்நாளில் சந்திக்க கூடாது என்று நினைத்தானோ அதே அகிலா.

அவளிடமும் எல்லா கேள்விகளும் கேட்கப்பட்டன. எல்லாவற்றிக்கும் சரியாகவே பதில் சொன்னாள். இவளை எப்படி வேலைக்கு எடுத்துக்கொள்வது. இவள் முகத்தில் தினம்தினம் விழிக்கவேண்டுமே. கடவுளே என்ன எனக்கு வந்த சோதனை என எண்ணினான்.

ஒருவாரம் கழித்து உங்களுக்கு போன் செய்கிறோம் என்று கூறினான் முகிலன்.

பலவாறாக யோசித்து அகிலாவை வேலைக்கு சேர்த்துக்கொள்வது என முடிவெடுத்தான் முகிலன். தன் உதவியாளரிடம் அவளுக்கு தொலைபேசசொன்னான் இந்த செய்திக்காக.

உதவியாளர் அவளிடம் தொடர்பு கொண்டு விட்டுசொன்னார். சார் அவர்கள் வேறொரு கம்பெனியில் சேர்ந்து விட்டார்களாம் என்றார்.

முகிலன் சந்தோசப்பட்டான். அகிலா வீட்டில் கவலையுடன் அமர்ந்துகொண்டு இருந்தாள். தன் செய்த தவறு இன்று இந்த நிலையில் தன்னை நிறுத்தியுள்ளது என எண்ணி வருந்தினாள்.
வேலையில்லாமலே வேலையில் சேர்ந்து விட்டதாக பொய் சொன்னதை நினைத்து வருந்தினாள்.

ஐந்து வருடங்களுக்கு முன்னால் முகிலனும் அகிலாவும் ஒரே கம்பெனியில் வேலை புரிந்துகொண்டிருந்தனர். முகிலன் முடிக்கவேண்டிய project முடிந்துவிட்டாலும் தனக்காக காத்திருக்குமாறுசொல்வாள். ஆனால் இவள் முடித்தவுடன் அவனிடம் எதுவும் சொல்லாமல் அதிகாரியிடம் சமர்ப்பித்துவிடுவாள். இவன் சீக்கிரம் வேலைசெய்யவில்லை என்றும் வத்தி வைப்பாள். அதனால் முகிலனின் வேலை பறிக்கப்பட்டது. வேலைசெய்யவில்லையெனினும் வேலைசெய்வது போல் நடிப்பாள். தான் செய்த தீயசெயலுக்காக வந்த விளைவை எண்ணி வருத்தப்பட்டாள் அகிலா.

3 comments:

Robin said...

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

Unknown said...

இன்றைய டாப் ஐம்பது வலை பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்