புதுஉலகம்.

கைநீட்டி வாங்க
தேவையில்லை
வங்கிக்கணக்கிற்கு
வந்துவிடுகிறது
ஊதியம்.

மனதின் எண்ணங்கள்
நிமிடத்தில்
எழுத்துக்களாக
பதிவுலகில்.

ஒரு கோடியில் உள்ள
சித்ராவின் எண்ணத்தை
மறுகோடியில் உள்ள
மித்ரா அறிகிறாள்.

என்னே விந்தை
உலகம் சுருங்கியது
மனிதர்கள் நெருங்கினர்

ஆசிரியர் மாணவர்
ஆராய்ச்சியாளர்
கணிப்பொறியாளர்
வடிவமைப்பாளர்
வங்கியாளர்
பாகுபாடில்லை
இப்புதுவுலகில்.

இப்போதே இப்படி
இன்னும் வருங்காலம்
இன்னும் எத்துணை
அதிசயங்கள் கொண்டிருக்குமோ
வரவேற்போம் புதுஉலகை.


நன்றி

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

.

2 comments:

அண்ணாமலையான் said...

ஆமாம்..

Unknown said...

நன்றி. அண்ணாமலையான்..