அந்தரங்கம் இது அந்தரங்கம்

இந்த வாரம் அந்தரங்கம் பகுதியில் படித்தது. நண்பர்களே தோழிகளே உங்களுக்காக பகிர்கிறேன்.

ஒரு இளம் பெண். அவளின் வயதோ 18. படிப்பதோ கல்லுரியில்.. காதல் என்பதே துளியும் பிடிக்காதாம். வேற்று மாநிலத்தை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்த இளம் பெண்.

அவளுக்கு ஒரு நண்பன். அவளுடன் பயில்கிறான். அவனின் சிந்தனைகள் இவளின் சிந்தனைளை ஒத்து இருக்கும்.

அவன் ஒருநாள் ஒரு 4 பேர் என்னுடன் வாழ்நாள் முழுவதும் வரவேண்டும் என்று நினைக்கிறேன். அந்த நால்வரில் நீயும் ஒருத்தி. என்று கூறி இருக்கிறான்.

அந்த பெண்ணிற்கு அன்றிலிருந்து வந்தது சந்தேகம். அவன் தன்னை காதலிக்கிறானோ என்று.

இந்நிலையில் ஒரு சீனியர் மாணவன் ஒருவன் அவளிடம் வந்து I LOVE YOU சொல்லியிருக்கிறான்.

அவன் நாம் நீ என்னை காதலி்க்கிறாய் என்று மட்டும் சொ்ல் பிறகு உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். எப்போதாவது மட்டும் உன்னை பார்க்கிறேன். நீயும் நன்கு படி.. நானும் என் வாழ்க்கையில் செட்டில் ஆகிறேன். அப்புறம் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறான்.

ஆக சீனியரா அல்லது நண்பனா என்ற குழுப்பத்தில் மாணவி..


படிப்பில் கவனம் செலுத்துமாறு சகுந்தலா மேடம் அறிவுரை கூறியிருந்தார்கள்.

காதல் என்று ஆரம்பித்து விட்டால் மனது கல்வியை புறம் தள்ளிவிடும்.

முழுமூச்சாக படி.

காதலிக்க இது தகுந்த தருணம் அல்ல..

நடக்க வேண்டிய நேரத்தில் அது அது் தானாய் நடக்கும் என்று கூறியிருந்தார்கள். நல்ல அறிவுரை...

No comments: