கிரகம்(சிறுகதை)..




ANDREW பூங்காவிற்கு சற்று நேரம் நண்பனிடம் பேசிக் கொண்டிருக்கலாம் என சென்றான்.

நண்பனையும் வரச்சொல்லியிருந்தான்.

சே இவ்வளவு நேரம் ஆச்சு இன்னும் இவனை காணலையே…

அப்போதுதான் பார்த்தான். பூங்காவில் உள்ள ஒரு பெஞ்சில் வித்தாயசமான உருவம் அமர்ந்திருப்பதை…

அதன் அருகில் சென்றான். அது இவனை பார்த்து Hello என்றது.

பார்க்க மனிதனின் சாயலும் இருந்தது அதனிடம்…

இவனும் பதிலுக்கு Hello என்றான்…

அதன் கண்கள் மிகப்பெரியனவாயிருந்தன.. நிறம் வெளிர் பச்சை நிறத்தில் இருந்தது.

நீ நீ நீங்கள் யார் என்றான் சற்று உதறியவாறே…

நான் வேற்றுகிரகவாசி என்றது.

Andrew ஆச்சர்யத்தில் ஆழ்ந்தான். உங்களுக்கு எங்கள் மொழி எப்படி தெரியும்.

எங்களுக்கு அனைத்து மொழிகளும் தெரியும். அப்படி தெரியாத பட்சத்தில் என்னிடம் உள்ள ரோபோ பதிலளிக்கும்.


ஓ அப்படியா… நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள் என்றான் Andrew.

கிரகம் விட்டு கிரகம் பாயும் ஊர்தி உள்ளது எங்களிடம் அதன்மூலம் இங்கு வந்தேன்.

எதற்காக இங்கு வந்தீர்கள். பூமி கிரகத்தை பற்றி ஆராய்வதற்காக வந்தேன்.

இவ்வளவு நேரம் பேசியதில் பயம் சிறிது தெளிந்தது.

உங்களுடைய வாகனம் எங்குள்ளது.அங்குதான் நிற்கிறது என கைகாண்பித்தான்.

அங்கு ஒரு வித்யாசமான வாகனம் நின்று கொண்டிருந்தது.
வாருங்கள் அருகே சென்று பார்ப்போம் என அழைத்து சென்றது.

Andrew வும் உடன் சென்றான். உள்ளே சென்று பார்த்தான். உடனே ஊர்தி புறப்பட்டு விட்டது.

அய்யோ என அலறினான் Andrew. என்னை எங்கே அழைத்து செல்கிறாய் என கத்தினான்.

எங்கள் கிரகத்திற்கு என்றான் cool ஆக.. எதற்காக என்றான் பதட்டம் மற்றும் பயத்துடன்.

நாங்கள் எல்லா கிரகங்களை பற்றி ஆராய்ச்சி செய்கிறோம். அதற்காக எல்லா கிரக வாசிகளும் எங்களுக்கு தேவைப்படுகிறார்கள்.

பயப்படாதே உன்னிடம் சில பரிசோதனைகள் செய்து விட்டு இன்று மாலைக்குள் உன்னை உன் கிரகத்திற்கு அனுப்பிவிடுகின்றேன்.

இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை. நான் சொல்லியிருந்தால் நீ வந்திருப்பாயா என்றான் வேற்றுகிரகவாசி.

வாகனம் அவனுடைய கிரகத்தை அடைந்துவிட்டிருந்தது. மிகப்பெரிய மாளிகைக்குள் அழைத்து சென்றான். அங்கு ஒருவன் மிகப்பெரிய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான்.

Hi Boss பூமி கிரக மனிதனை கூட்டி கொண்டு வந்துள்ளேன் என்றான்.

Very nice. அவனிடம் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிந்ததும் அவனை பூமி கிரகத்திற்கு கொண்டு வந்து விட்டான் வேற்றுகிரகவாசி. வாகனத்தை விட்டு இறங்கும்போது ஏதோ ஒரு சத்தம் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது.

என்ன சத்தம் இது என்று யோசித்தான் Andrew. Andrew வின் அம்மா alarm அடிக்குது இவ்வளவு நேரமா. எழுந்திரிக்காம இன்னும் என்னடா தூக்கம் என இவனை உலுக்கினாள்.

Andrew எழுந்தான். அட சே இவ்வளவுநேரம் தான் கண்டது கனவா என நினைத்து கொண்டே brush செய்ய சென்றான்.

நன்றி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

.

4 comments:

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு..

Unknown said...

நன்றி அண்ணாமலையான் அவா்களே.. வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும்

angel said...

mmmmmmmmmm ena comedy pandringale avvvvv

Unknown said...

yes timepass angel