கிசோரும் குமாரும்

கிசோர் மற்றும் குமார் ஆகிய இருவரும் உயிர் நண்பர்கள். இருவரும் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின் தம்தம் வழியில் பிரிந்து சென்றனர்.

கிசோருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் குமாரின் திருமண அழைப்பிதழ் வந்தது. கிசோர் குமாரின் திருமணத்திற்கு புறப்பட்டான்.

புறப்பட முடியாத நிர்பந்தமான சூழ்நிலைக்கிடையில் புறப்பட்டான் கிசோர்.

திருமண மண்டபத்தை அடைந்தான்.

கோலகலமாக திருமண ஏற்பாடுகள் நடந்தது.

தீடீரென சலசலப்பு

மணப்பெண்ணை காணவில்லை என்று.

குமாரின் திருமணம் நின்று போனது.

கிசோருக்கு வருத்தமாகி போனது.

திரும்ப சென்று விட்டான்.

8 மாதங்களுக்கு பின் மறுபடியும் குமாரின் திருமண அழைப்பிதழ் வந்தது.

கிசோர் சென்றான். இந்த திருமணமும் பெண் காணாமல் போனதால் நின்றது.

ஏன் குமாருக்கு இப்படி நடக்கிறது.

அனைவரும் குமாருக்காக பரிதாபப்பட்டனர்.

ராசியில்லை என்றனர்.

இப்படி 5 தடவை திரும்ப திரும்ப நடந்தது.

கடைசியில் உண்மை கண்டுபிடிக்கப்பட்டது.

குமார் ராசியில்லாமல் இல்லை.

குமார் பெண்களை விற்கும் வேலையில் ஈடுபட்டான் என்ற உண்மை போலிசு விசாரணையில் தெரிந்தது.

பணத்திற்காக இப்படி எல்லாம் நண்பன் நடந்தானே என்ற வேதனை கிசோருக்கு.

முற்றும்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நண்பனா அவன்...?

Unknown said...

நண்பனல்ல. துரோகி...