கவிதாவிற்கு மிகவும் பயமாகயிருந்தது. தமிழ் ஆசிரியர் இன்று 10 திருக்குறளை மனப்பாடம் செய்யசொல்லியிருந்தாள்.
கவிதா அவற்றை மனப்பாடம் செய்ய மறந்துபோனாள். டிவி பார்த்துகொண்டு இருந்ததில் படிக்கவேயில்லை.
3வது பீரியட் தமிழ். முதல் 2 பீரியட் முடிந்து தமிழ் ஆசிரியரும் வந்து விட்டார். ஒவ்வொருவராக ஒப்பிக்கவும் சொல்லி ஒப்பித்துகொண்டிருந்தனர். மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டிருந்தார் தமிழ் ஆசிரியை. கவிதாவிற்கு ஒரே ஒரு குறள் மட்டும் நன்றாக தெரியும்.
மாலதியை ஒப்பிக்கசொன்னார். அவள் 5 குறளை சொன்னாள். அவளை அமர சொல்லிவிட்டு கவிதாவிடம் ஒப்பிக்க சொல்லி சொன்னார் தமிழ் ஆசிரியை. 6 வது குறளை சரியாக மிக விரைவாக சொன்னாள் கவிதா.
தமிழாசிரியர் இவ்வளவு விரைவாக சொல்கிறாயே அப்படி என்றால் நீ எல்லாவற்றையும் நன்றாக படித்திருப்பாய் உட்கார் என கூறிவிட்டார்.
நிம்மதி பெருமூச்சுவிட்டாள் கவிதா.
Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts
செயல்விளைவு
முகிலன் தன் இருக்கையில் அமர்ந்திருந்தான். இன்று நேர்முகத்தேர்வுக்கு ஆட்களை தேர்தெடுக்கவேண்டும்.
பத்துபேர் தேர்வுக்கு வந்திருந்தனர்.
ஒவ்வொருவராக அழைத்து கேள்விகளைக்கேட்டுக்கொண்டிருந்தான்.
5 பேர் முடிந்துவிட்டது. 6 வது நபரை கூப்பிட்டான். உள்ளே நுழைந்த பெண்ணை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தான்.
யாரைத் தன் வாழ்நாளில் சந்திக்க கூடாது என்று நினைத்தானோ அதே அகிலா.
அவளிடமும் எல்லா கேள்விகளும் கேட்கப்பட்டன. எல்லாவற்றிக்கும் சரியாகவே பதில் சொன்னாள். இவளை எப்படி வேலைக்கு எடுத்துக்கொள்வது. இவள் முகத்தில் தினம்தினம் விழிக்கவேண்டுமே. கடவுளே என்ன எனக்கு வந்த சோதனை என எண்ணினான்.
ஒருவாரம் கழித்து உங்களுக்கு போன் செய்கிறோம் என்று கூறினான் முகிலன்.
பலவாறாக யோசித்து அகிலாவை வேலைக்கு சேர்த்துக்கொள்வது என முடிவெடுத்தான் முகிலன். தன் உதவியாளரிடம் அவளுக்கு தொலைபேசசொன்னான் இந்த செய்திக்காக.
உதவியாளர் அவளிடம் தொடர்பு கொண்டு விட்டுசொன்னார். சார் அவர்கள் வேறொரு கம்பெனியில் சேர்ந்து விட்டார்களாம் என்றார்.
முகிலன் சந்தோசப்பட்டான். அகிலா வீட்டில் கவலையுடன் அமர்ந்துகொண்டு இருந்தாள். தன் செய்த தவறு இன்று இந்த நிலையில் தன்னை நிறுத்தியுள்ளது என எண்ணி வருந்தினாள்.
வேலையில்லாமலே வேலையில் சேர்ந்து விட்டதாக பொய் சொன்னதை நினைத்து வருந்தினாள்.
ஐந்து வருடங்களுக்கு முன்னால் முகிலனும் அகிலாவும் ஒரே கம்பெனியில் வேலை புரிந்துகொண்டிருந்தனர். முகிலன் முடிக்கவேண்டிய project முடிந்துவிட்டாலும் தனக்காக காத்திருக்குமாறுசொல்வாள். ஆனால் இவள் முடித்தவுடன் அவனிடம் எதுவும் சொல்லாமல் அதிகாரியிடம் சமர்ப்பித்துவிடுவாள். இவன் சீக்கிரம் வேலைசெய்யவில்லை என்றும் வத்தி வைப்பாள். அதனால் முகிலனின் வேலை பறிக்கப்பட்டது. வேலைசெய்யவில்லையெனினும் வேலைசெய்வது போல் நடிப்பாள். தான் செய்த தீயசெயலுக்காக வந்த விளைவை எண்ணி வருத்தப்பட்டாள் அகிலா.
பத்துபேர் தேர்வுக்கு வந்திருந்தனர்.
ஒவ்வொருவராக அழைத்து கேள்விகளைக்கேட்டுக்கொண்டிருந்தான்.
5 பேர் முடிந்துவிட்டது. 6 வது நபரை கூப்பிட்டான். உள்ளே நுழைந்த பெண்ணை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தான்.
யாரைத் தன் வாழ்நாளில் சந்திக்க கூடாது என்று நினைத்தானோ அதே அகிலா.
அவளிடமும் எல்லா கேள்விகளும் கேட்கப்பட்டன. எல்லாவற்றிக்கும் சரியாகவே பதில் சொன்னாள். இவளை எப்படி வேலைக்கு எடுத்துக்கொள்வது. இவள் முகத்தில் தினம்தினம் விழிக்கவேண்டுமே. கடவுளே என்ன எனக்கு வந்த சோதனை என எண்ணினான்.
ஒருவாரம் கழித்து உங்களுக்கு போன் செய்கிறோம் என்று கூறினான் முகிலன்.
பலவாறாக யோசித்து அகிலாவை வேலைக்கு சேர்த்துக்கொள்வது என முடிவெடுத்தான் முகிலன். தன் உதவியாளரிடம் அவளுக்கு தொலைபேசசொன்னான் இந்த செய்திக்காக.
உதவியாளர் அவளிடம் தொடர்பு கொண்டு விட்டுசொன்னார். சார் அவர்கள் வேறொரு கம்பெனியில் சேர்ந்து விட்டார்களாம் என்றார்.
முகிலன் சந்தோசப்பட்டான். அகிலா வீட்டில் கவலையுடன் அமர்ந்துகொண்டு இருந்தாள். தன் செய்த தவறு இன்று இந்த நிலையில் தன்னை நிறுத்தியுள்ளது என எண்ணி வருந்தினாள்.
வேலையில்லாமலே வேலையில் சேர்ந்து விட்டதாக பொய் சொன்னதை நினைத்து வருந்தினாள்.
ஐந்து வருடங்களுக்கு முன்னால் முகிலனும் அகிலாவும் ஒரே கம்பெனியில் வேலை புரிந்துகொண்டிருந்தனர். முகிலன் முடிக்கவேண்டிய project முடிந்துவிட்டாலும் தனக்காக காத்திருக்குமாறுசொல்வாள். ஆனால் இவள் முடித்தவுடன் அவனிடம் எதுவும் சொல்லாமல் அதிகாரியிடம் சமர்ப்பித்துவிடுவாள். இவன் சீக்கிரம் வேலைசெய்யவில்லை என்றும் வத்தி வைப்பாள். அதனால் முகிலனின் வேலை பறிக்கப்பட்டது. வேலைசெய்யவில்லையெனினும் வேலைசெய்வது போல் நடிப்பாள். தான் செய்த தீயசெயலுக்காக வந்த விளைவை எண்ணி வருத்தப்பட்டாள் அகிலா.
ஸ்ரீமத்தானந்தா

என்ன சிஷ்யா இன்று நம் ஆசிரமத்திற்கு ஒரு ஈ காக்காயைக்கூட காணோம்.
ஆசிரமாம் பெரிய ஆசிரமம். 2 பேரு தங்கறமாதிரியான சின்ன குடிசை மனதிற்குள் நினைத்துக்கொண்டான் சிஷ்யன் சிகாமணி
ஆமாம் குருவே.
******************************
ஒரு தொழிலதிபர் காரில் போய் கொண்டிருந்தார்.
ஆண்டவா என் பிரச்சனைக்கு நல்ல தீர்வு நீதான் தரணும்.
அப்போது கண்ணில் தென்பட்டது அந்த போர்டு. ஸ்ரீமத்தானந்தா ஆசிரமம். இங்கு சகல பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்கப்படும்.
**************************
காரை நிறுத்தினார். குருஜியைப்பார்க்க முடியுமா என்றார் சிஷ்யனிடம்.
இங்கே அமருங்கள். குருவிடம் கேட்டுகொண்டு வந்து சொல்கிறேன்.
குருவே. உம்மைப் பார்க்க ஒருவர் வந்திருக்கிறார். அனுப்பட்டுமா.
இல்லை சிஷ்யா. நான் தியானம் பண்ணுவதாக சொல். அரை மணிநேரம் கழித்து அனுப்பு.
********************
சுவாமிஜி தியானத்தில் இருக்கிறார். ஒரு அரைமணிநேரம் வெயிட் பண்ணுங்க.
சரி என்றார் தொழிலதிபர்.
அரைமணிநேரம் கழித்து இப்ப நீங்க போகலாம்.
********************
அமருங்கள்.
தங்களின் திருநாமம் ரகு அல்லவா.
ஆகா சாமி எப்படி இவ்வளவு கரக்டா சொல்லிட்டிங்க.
அதுமட்டுமா தங்களுக்கு 2 தங்கைகள் 1 தம்பி. தங்களுக்கு திருமணம் முடிந்து 12 வருடங்களாகின்றன. இப்போது தொழிலில் பிரச்சனை.
நான் சொல்வது சரியா.
100% எல்லாமே சரிங்க. என் தொழில் பிரச்சனை எப்போது தீரும் என்று கேட்கதான் வந்தேன் சுவாமிஜி.
இன்னும் 3 மாதங்களில் தீர்ந்துவிடும். கவலைப்படாமல் போங்கள்.
நன்றி சுவாமிஜி. இந்தாருங்கள் இப்போது என் காணிக்கை பத்தாயிரம் ரூபாய்.
நன்றி அதை அங்கே வைத்துவிட்டுப்போங்கள்.
*******************
குருவே இன்னைக்கு நல்ல கலெக்க்ஷன் போல
ஆமாம் சிஷ்யா.
குருவே நானும் வெளியில் இருந்து கேட்டுட்டுதான் இருந்தேன். எப்படி எல்லாத்தையும் அவ்வளவு கரக்டா சொன்னீங்க.
வேற ஒன்றுமில்லை சிஷ்யா. அவன் என் பால்ய சிநேகிதன். அவன் உள்ளே நுழைந்ததும் நான் அவனை அடையாளம் கண்டுகொண்டேன். ஆனால் நான் தாடி எல்லாம் வைத்துக்கொண்டிருப்பதால் அவன் என்னை அடையாளம் காணவில்லை. அதுவுமில்லாமல் 12 வருடங்கள் ஆகிவிட்டன அல்லவா அடையாளம் காண்பது சிரமமே.
அது சரி. தொழிலில் நஷ்டம் என எப்படி சொன்னீர்கள்.
நாளிதழ் பார்த்து தெரிந்துகொண்டேன்.
3 மாதங்களில் சரியாகிவிடும் என்று சுவாமிஜி சொன்னதால் உற்சாகமாக எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொண்டு தீர்த்துவிட்டார் தொழிலதிபர்.
****************
6 மாதங்களுக்கு பின்.
சுவாமிஜியைத்தேடி வந்தார் தொழிலதிபர்.
சுவாமிஜி தங்களுக்காக நான் என்னுடைய 25 ஏக்கர் நிலத்தில் ஆசிரமம் ஒன்று அமைத்துள்ளேன். ஆசிரமத்தை சுற்றிலும் தோட்டங்கள் செடி கொடிகள் என அருமையாக உள்ளது.
தங்கள் இனிமேல் ஆசிரமத்திற்கு வந்து சேவையாற்ற வேண்டும் என்றார்.
எல்லாம் அவன் செயல். நான் வேறென்ன சொல்ல போகிறேன்.
அப்பா இப்போதான் நமக்கு குடிசையில் இருந்து கோபுரத்திற்கு போற அதிர்ட்ஷம் வந்திருக்கு என்று சந்தோசத்துடன் சென்றான் சிஷ்யன் சிகாமணி.
முற்றும்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
அவளா அப்படி(சிறுகதை)

கண்ணன் மாலை காய்கறி வாங்க கடைத்தெருவிற்கு போயிருந்தான்.
காய்கறி வாங்கிக்கொண்டு திரும்பும் போது கண்ணா கண்ணா என்று அழைத்த குரல்கேட்டு திரும்பினான். அவர்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் வாசுதேவன்.
ரொம்ப நாளா உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லனுமின்னு ஆனா உங்களை பாக்கவே முடியறதில்லை.
ம் சொல்லுங்க என்றான்.
இது என் Wife சொன்ன விசயம். உங்க wife Daily நீங்க ஆபிஸிக்கு போன உடனே ஒரு 2 மணிநேரம் எங்கயோ போய்ட்டு வராங்கலாம். இது தினமும் நடக்குதாம்.
எதுக்கும் உங்க காதுலயும் போட்டு வைக்கலாமின்னு. சரிங்க வாசுதேவன். நான் என்ன ஏதுன்னு பாக்கறேன். அவசரமாய் சொல்லிவிட்டு நழுவினான்.
ஒரே குழப்பமாக இருந்தது கண்ணனுக்கு தன் மனைவி தன்னிடம் எதையும் மறைத்ததில்லையே. எங்கு செல்கிறாள் தினமும். நாளை சென்று பார்த்துவிடவேண்டியதுதான்.
அடுத்தநாள் அலுவலகம் செல்லுவதாக சொல்லிவிட்டு தெரிந்த நண்பனின் கடையில் wait பண்ணினான். தன் மனைவி கிளம்பியபின் பின்தொடர்வதற்காக.
கண்ணனுடைய மனைவி ரேவதி வீட்டைவிட்டு கிளம்பினாள். இவனும் சற்று இடைவெளி விட்டு பின் தொடர்ந்தான்.
அங்கே ஒரு ஆசிரமத்திற்குள் நுழைந்தாள். பிள்ளைகள் படிப்பதற்கான பள்ளிகளும் ஆசிரமத்திலேயே இருந்தன. அங்கே சென்றாள் அவன் மனைவி. இவனும் பின்தொடர்ந்தான்.
3ம்வகுப்பிற்குள் நுழைந்த அவளை பார்த்தவுடன் ஒரு சிறுமியை அவளிடம் அனுப்பிவைத்தார் ஆசிரியை.
கண்ணன் ஒரு மரத்தின் பின்னே ஒளிந்துகொண்டான். அந்த சிறுமிக்கு தான் கொண்டு வந்திருந்த டிபன் பாக்ஸை தந்தாள்.
அவளும் மம்மி நாளைக்கு சீக்கிரமே வர்ரீயா என்றாள். ம் சரிம்மா. நீ சமத்தா படிக்கனும். மம்மி போய்டு வரேன் என்றாள்.
வீட்டிற்கு கிளம்பிவிட்டாள் மனைவி ரேவதி. கண்ணனுக்கு பல எண்ணங்கள் பலபல குழப்பங்கள். அந்த சிறுமி பார்ப்பதற்கு வேறு தன் மனைவியின் சாயலிலேயே இருந்ததால் குழப்பம் அதிகமாகியது. ஒருவேளை திருமணத்திற்கு முன் தவறான தொடர்பு இருக்குமோ அதனால் பிறந்த குழந்தையோ. கண்ணனுக்கு யோசித்து யோசித்து தலைவலித்தது.
மாலை எப்போதும் போல வீடு திரும்பினான். என்னங்க இன்னைக்கு ரொம்ப டயர்டா இருக்கீங்க. ஆபிஸ்ல ரொம்ப வேலையோ என்றாள்.
இதுக்கும் ஒன்னும் கொறச்சலில்லை மனதில் நினைத்துக்கொண்டான்.
காலைல எங்க போன நான் ஒரு பைல எடுக்கறதுக்காக வந்தேன். வீடு lock பண்ணியிருந்துச்சு என்றான்.
கடைத்தெருவிக்கு போனேங்க என்றாள்.
இது சரிப்படாது. நேரடியாகவே விசயத்திற்கு வந்தான். யார் அந்த குழந்தை. காலைல நடந்ததெல்லாம் நான் பாத்திட்டு தான் இருந்தேன்.
ரேவதியின் முகம் இருட்டிபோய்விட்டது. அது வந்து அது வந்து என்று இழுத்தாள்.
ம் சொல்லு கர்ச்சித்தான்.
அது எங்க அக்காவோட குழந்தைங்க. அக்காவும் மாமாவும் லவ் மேரேஜ்ங்கறாதால எங்கஅம்மா அப்பாவோ அவங்க அம்மா அப்பாவோ அவங்க கல்யாணத்த ஒத்துக்கலை. அதுமட்டுமில்ல அவளை தலைமுழுகிட்டாங்க. ஆனா நான் மட்டும் அவகூட கான்டக்ட்ல இருந்தேன்.
இரண்டு பேரும் ஒருநாள் பைக் ஆக்ஸிடேன்ட்ல இறந்துட்டாங்க. குழந்தைய ஆயா பொறுப்புல விட்டுட்டுபோயிருந்தாங்க. இந்த விசயம் இதுவரைக்கும் எங்க அப்பாஅம்மாவுக்கு கூட தெரியாதுங்க. அவங்க எங்கியோ இருக்கறதாதான் நினைச்சிட்டு இருக்காங்க.
நான்தான் குழந்தைய ஆசிரமத்துல சேத்து வளக்கறதுக்கு ஏற்பாடு பண்ணேன். என்னை மன்னிச்சுடுங்க உங்ககிட்ட சொல்லாததுக்கு என்று அழுதாள்.
இதை என்கிட்ட முன்னமே சொல்லியிருந்தா குழந்தைய நாமளே வளர்த்திருக்கலாமில்ல நமக்கும் கல்யாணமாகி 6 வருசமாக குழந்தையில்ல. நம்ம குழந்தையா அவளை பாத்திருக்கலாமில்ல.
சரி சரி கிளம்பு நம்ம போய் குழந்தைய அழைச்சிட்டு வந்திரலாம் என்றான் குழப்பங்கள் நீங்கபெற்ற கண்ணன். ரேவதியும் மகிழ்ச்சியாக கிளம்பினாள்.
முற்றும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
ஆழமறிந்து.

நர்மதா ஒரு கணிப்பொறி சார்ந்த நிறுவனத்தின் சென்னை கிளையில் வேலை செய்கிறாள். தனக்கு கொடுக்கப்பட்ட வேலை முடிந்ததும் orkut ல் scrap செய்வதும் google ல் chat செய்வதுமே அவள் வேலை. இதன் வழியாக நண்பனாக அறிமுகம் ஆனான் தினேஷ்.
பார்க்காமலேயே நர்மதா தினேஷின் நட்பு நாளுக்குநாள் வளர்ந்தது. காதலாக மலர்ந்தது. தான் பெங்களுரில் கணிப்பொறி நிறுவனத்தில் வேலைசெய்வதாக சொன்னான். ஒருநாள் நேரில் சந்திப்பதாகவும் சொன்னான். நர்மதாவும் அவனை தன் வீட்டிற்கு அழைத்தாள். அவனும் வந்து நர்மதாவின் தாய்தந்தையிடம் நன்கு பேசினான். பார்ப்பதற்கும் அழகனாக தெரிந்தான்.
நர்மதாவின் அலுவலக நண்பர்கள் சரியாக விசாரிக்காமல் யாரோ ஒருவனை நம்பாதே. திருமணம் செய்துகொள்ளாதே என அறிவுரை கூறினர். நிஜத்தில் நடந்த பல விசயங்களையும் சொல்லி நர்மதாவை எச்சரித்தனர். நர்மதா யார் பேச்சையும் கேளாமல் தன் காதலில் உறுதியாக இருந்தாள். மனிதன் என்று பிறந்துவிட்டால் யாராவது ஒருவரை நம்பி அல்லது சார்ந்துதான் வாழவேண்டும். நான் தினேஷை நம்புகிறேன். அதற்கும் மேலே என்னை நம்புகிறேன். எந்த ஒரு தீமையும் என்னை எப்போதும் அணுகாது என்பதில் உறுதியாய் நேர்மறை எண்ணத்தோடு இருக்கிறேன் என்றாள்.
தனக்கு தாய்தந்தை யாரும் இல்லையெனவும் அதனால் நாம் திருமணம் முடிந்தவுடன் சென்னையிலேயே வேலைபார்த்து செட்டில் ஆகிவிடலாம் என்றும் கூறினான். நர்மதாவும் சரிஎன்றாள்.
ஒரு சுபயோக சுபதினத்தில் நர்மதா தினேஷின் திருமணம் நடந்தது. தினேஷிற்கு சென்னையிலேயே வேலையும் கிடைத்தது.
மனம்போல் மாங்கல்யம் அடையப்பெற்ற இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தினர்.
அன்றும் இன்றும்
ஏங்க இங்க பாருங்க உங்களத்தான்
என்ன என்றான் சுகுமார்.
பக்கத்து வீட்டு மாலா நிலம் வாங்கிட்டாங்க. பெரிய ரியல் எஸ்டேட் வியாபாரிகிட்டங்க. முதல்ல லட்சம் ரூபா கட்டினாப் போதுமாம். அப்புறம் மாசாமாசம் தவணைல கட்டலாமாம் நல்ல திட்டமா இருக்குங்க. நாமாளும் வாங்கலாங்க.
இப்ப லட்ச ரூபாய்க்கு எங்க போறது.
கடனை கிடனை வாங்கி வாங்கலாங்க. கடன் என்ற வார்த்தையே பிடிக்காது சுகுமாருக்கு.
அதல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது. வாங்கறதார்ந்த மொத்தகாசும் குடுத்து வாங்கனும். சும்ம தொண தொணங்கதா.
நான் சொல்லி எத நீங்க கேட்டு இருக்கீங்க. ம் எல்லாம் என் தலையெழுத்து.
இதைச்சொல்லிசொல்லியே புலம்பிக்கொண்டிருந்தாள் 3 மாதகாலமாக.
சுகுமார் அன்று லேட்டாக வீட்டிற்கு வந்தான்.
என்னங்க உங்களுக்க விசயம் தெரியுமா?
என்ன என்றான்.
அந்த REAL ESTATE வியாபாரி மொத்த பணத்தையும் சுருட்டிட்டு ஓடிட்டானாங்க. TV News ல சொன்னாங்க.
நல்லவேல நாம தப்பிச்சோம். வாங்கியிருந்தா 1 லட்சரூபா போயிருக்கும் என்றாள். நீங்க வாங்கவேணா சொன்னது நல்லதாப்போச்சு என்றாள் சந்தோசமாக.
முற்றும்
நன்றி
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
என்ன என்றான் சுகுமார்.
பக்கத்து வீட்டு மாலா நிலம் வாங்கிட்டாங்க. பெரிய ரியல் எஸ்டேட் வியாபாரிகிட்டங்க. முதல்ல லட்சம் ரூபா கட்டினாப் போதுமாம். அப்புறம் மாசாமாசம் தவணைல கட்டலாமாம் நல்ல திட்டமா இருக்குங்க. நாமாளும் வாங்கலாங்க.
இப்ப லட்ச ரூபாய்க்கு எங்க போறது.
கடனை கிடனை வாங்கி வாங்கலாங்க. கடன் என்ற வார்த்தையே பிடிக்காது சுகுமாருக்கு.
அதல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது. வாங்கறதார்ந்த மொத்தகாசும் குடுத்து வாங்கனும். சும்ம தொண தொணங்கதா.
நான் சொல்லி எத நீங்க கேட்டு இருக்கீங்க. ம் எல்லாம் என் தலையெழுத்து.
இதைச்சொல்லிசொல்லியே புலம்பிக்கொண்டிருந்தாள் 3 மாதகாலமாக.
சுகுமார் அன்று லேட்டாக வீட்டிற்கு வந்தான்.
என்னங்க உங்களுக்க விசயம் தெரியுமா?
என்ன என்றான்.
அந்த REAL ESTATE வியாபாரி மொத்த பணத்தையும் சுருட்டிட்டு ஓடிட்டானாங்க. TV News ல சொன்னாங்க.
நல்லவேல நாம தப்பிச்சோம். வாங்கியிருந்தா 1 லட்சரூபா போயிருக்கும் என்றாள். நீங்க வாங்கவேணா சொன்னது நல்லதாப்போச்சு என்றாள் சந்தோசமாக.
முற்றும்
நன்றி
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
கடந்து வந்த பாதை.(சிறுகதை)

நரேந்திரன் தன் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை தன் சொந்த 2 படுக்கையறை கொண்ட புது வீட்டில் அமர்ந்து கொண்டு அசைபோட ஆரம்பித்தான்.
நரேந்திரனின் அப்பாவிற்கு ஒரு அரசு அலுவலகத்தில் Clerk வேலை. நரேந்திரனுக்கு முன் மூன்று அக்காக்கள். 4 பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைத்தார் நரேந்திரனின் அப்பா ராகவன். வாடகை வீட்டு வாசம். வாடகை வீடே பெரியது. 1000 ரூபாய் வாடகை.(அப்போதெல்லாம் 1000 ரூபாய்க்கே பெரிய வசதியான வீடுகள் கிடைத்துக்கொண்டிருந்த காலம். இப்போது 10000 ரூபாய்க்கு கூட சென்னையில் நல்ல வசதியான வீடுகள் கிடைப்பதில்லை)
ஓய்வு பெறும் முன்னமே தன் சேமிப்பை கொண்டு தன் மகள்களை நல்ல இடங்களில் திருமணமும் முடித்துக்கொடுத்தார். நரேந்திரனையும் நன்றாக படிக்க வைத்துவிட்டார். ஓய்வு பெற்றபின் வந்த பணத்தில் ஒரு 2கிரவுண்ட் நிலம் வாங்கி 1 படுக்கையறை மற்றும் 3 அறைகள் உள்ள வீட்டை கட்டிமுடித்து விட்டார். தன் பிந்தைய வாழ்நாளை மனைவியுடன் கழித்தார் மகிழ்ச்சியுடன்.
நரேந்திரனுக்கு பாரின் போகவேண்டும் என்ற இலட்சியம். தன் எண்ணப்படியே பாரினுக்கு போய் ஒரு வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றினான். திருமணமும் முடிந்தது. தன் மனைவியுடன் அயல் தேசம் பறந்தான்.
தாய்தந்தையின் காலத்திற்கு பிறகு அப்பா கட்டிய அந்த வீட்டை விற்று 4 பேரும் பங்கிட்டுக்கொண்டனர்.
நரேந்ததிரனுக்கு 2 குழந்தைகள் 1 மகன் 1 மகள். பிள்ளைகள் பெரியவர்களும் ஆகிவிட்டனர். நரேந்திரனை பிரிந்தும் சென்றுவிட்டனர்.
அயல்தேச கலாச்சாரம் துணைகளை சீக்கிரமாகவே தேடிக்கொண்டனர். சீக்கிரமாக விவாகரத்து வாங்கி பிரிந்தும் விட்டனர்.
இப்போது வேறு துணைகளோடு இணைந்துள்ளதாக கேள்வி.(இது எவ்வளவு நாளைக்கோ ஆண்டவனுக்கே வெளிச்சம்)
நரேந்திரனுக்கு ஓய்வு பெற்றபிறகு தன் தாய்நாட்டிற்கு வந்து செட்டில் ஆக வேண்டும் என ஆசை. ஆனால் அவன் மனைவி அதற்கு உடன்படவில்லை. அவளுக்கு அமெரிக்காதான் பிடித்துள்ளதாம். அவளுக்கு தேவையான வசதிகள் செய்துகொடுத்துவிட்டு மீதம் இருந்த 80 லட்சம் பணத்துடன் இந்தியா திரும்பினான் நரேந்திரன்.

வீடு வாங்க அலைந்து திரிந்து சென்னை புறநகர்ப்பகுதியில் ஒரு 2 படுக்கையறைகொண்ட வீட்டை 60 லட்சத்திற்கு வாங்கினான். இப்போது புது வீட்டில் தன்னத்தனியாக யோசித்துக்கொண்டு இருக்கிறான் தான் நினைத்ததை சாதித்தோமா இல்லையா என்று.
இவ்வளவுகால அமெரிக்கா வாசத்திற்கு பிறகு தன்னால் தன் அப்பா கட்டிய வீடடைவிட 1 படுக்கையறை அதிகம் உள்ள வீட்டைத்தான் வாங்க முடிந்தது. இதற்காக தான் இழந்தது எத்துணை எத்துணை. நினைக்கையில் வருத்தமாக இருந்தது நரேந்திரனுக்கு.
நரேந்திரன் ஜெயித்தானா இல்லையா விடை தெரிந்தால் சொல்லுங்கள்.
நன்றி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
.
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
-
▼
2018
(35)
-
▼
January
(35)
- Vivasayam
- காதலிக்க வைக்க புது டெக்னிக் பயன்படுத்திய இளைஞர்
- South africa shoching news tamil
- DEIVAMAGAL TODAY EPISODE CLICK AND WATCH
- Good thoghts vs Alan james
- Manathai pathitha sambavam
- My story atm card
- Fat reducing technic
- முயற்சி
- Vazhdthu
- Abdul kalam
- Chandanam
- தானா சேர்ந்த கூட்டம்
- பண்பு
- Joke vadivelu joke watch watch
- ஆழ்மனசுல நல்ல எண்ணத்தை பதிய வைப்பது எப்படி?
- Fat reduce technic tamil
- Thalaiva Unnai Vananga Lyrics
- My youtube video
- THIRUKURAL
- தருமம்
- Happy bhogi happy bhogi
- Hipnotism Tamil
- Pongalo pongal
- கொய்யாபழம் பகிர்ந்து சாப்பிட நினைத்து உயிரிழந்த மா...
- கொய்யாபழம் பகிர்ந்து சாப்பிட நினைத்து உயிரிழந்த மா...
- நிலம் நிலம் நிலம்
- அப்பா
- எலி
- உழைப்பும் என் கருத்தும்
- ஆழ்மனம்
- Law of attraction
- Ballon theory parunga
- Vazhdu vazhvu
- Parattum Palanum
-
▼
January
(35)