Showing posts with label ஸ்டோரி. Show all posts
Showing posts with label ஸ்டோரி. Show all posts

கிரகம்(சிறுகதை)..




ANDREW பூங்காவிற்கு சற்று நேரம் நண்பனிடம் பேசிக் கொண்டிருக்கலாம் என சென்றான்.

நண்பனையும் வரச்சொல்லியிருந்தான்.

சே இவ்வளவு நேரம் ஆச்சு இன்னும் இவனை காணலையே…

அப்போதுதான் பார்த்தான். பூங்காவில் உள்ள ஒரு பெஞ்சில் வித்தாயசமான உருவம் அமர்ந்திருப்பதை…

அதன் அருகில் சென்றான். அது இவனை பார்த்து Hello என்றது.

பார்க்க மனிதனின் சாயலும் இருந்தது அதனிடம்…

இவனும் பதிலுக்கு Hello என்றான்…

அதன் கண்கள் மிகப்பெரியனவாயிருந்தன.. நிறம் வெளிர் பச்சை நிறத்தில் இருந்தது.

நீ நீ நீங்கள் யார் என்றான் சற்று உதறியவாறே…

நான் வேற்றுகிரகவாசி என்றது.

Andrew ஆச்சர்யத்தில் ஆழ்ந்தான். உங்களுக்கு எங்கள் மொழி எப்படி தெரியும்.

எங்களுக்கு அனைத்து மொழிகளும் தெரியும். அப்படி தெரியாத பட்சத்தில் என்னிடம் உள்ள ரோபோ பதிலளிக்கும்.


ஓ அப்படியா… நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள் என்றான் Andrew.

கிரகம் விட்டு கிரகம் பாயும் ஊர்தி உள்ளது எங்களிடம் அதன்மூலம் இங்கு வந்தேன்.

எதற்காக இங்கு வந்தீர்கள். பூமி கிரகத்தை பற்றி ஆராய்வதற்காக வந்தேன்.

இவ்வளவு நேரம் பேசியதில் பயம் சிறிது தெளிந்தது.

உங்களுடைய வாகனம் எங்குள்ளது.அங்குதான் நிற்கிறது என கைகாண்பித்தான்.

அங்கு ஒரு வித்யாசமான வாகனம் நின்று கொண்டிருந்தது.
வாருங்கள் அருகே சென்று பார்ப்போம் என அழைத்து சென்றது.

Andrew வும் உடன் சென்றான். உள்ளே சென்று பார்த்தான். உடனே ஊர்தி புறப்பட்டு விட்டது.

அய்யோ என அலறினான் Andrew. என்னை எங்கே அழைத்து செல்கிறாய் என கத்தினான்.

எங்கள் கிரகத்திற்கு என்றான் cool ஆக.. எதற்காக என்றான் பதட்டம் மற்றும் பயத்துடன்.

நாங்கள் எல்லா கிரகங்களை பற்றி ஆராய்ச்சி செய்கிறோம். அதற்காக எல்லா கிரக வாசிகளும் எங்களுக்கு தேவைப்படுகிறார்கள்.

பயப்படாதே உன்னிடம் சில பரிசோதனைகள் செய்து விட்டு இன்று மாலைக்குள் உன்னை உன் கிரகத்திற்கு அனுப்பிவிடுகின்றேன்.

இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை. நான் சொல்லியிருந்தால் நீ வந்திருப்பாயா என்றான் வேற்றுகிரகவாசி.

வாகனம் அவனுடைய கிரகத்தை அடைந்துவிட்டிருந்தது. மிகப்பெரிய மாளிகைக்குள் அழைத்து சென்றான். அங்கு ஒருவன் மிகப்பெரிய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான்.

Hi Boss பூமி கிரக மனிதனை கூட்டி கொண்டு வந்துள்ளேன் என்றான்.

Very nice. அவனிடம் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிந்ததும் அவனை பூமி கிரகத்திற்கு கொண்டு வந்து விட்டான் வேற்றுகிரகவாசி. வாகனத்தை விட்டு இறங்கும்போது ஏதோ ஒரு சத்தம் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது.

என்ன சத்தம் இது என்று யோசித்தான் Andrew. Andrew வின் அம்மா alarm அடிக்குது இவ்வளவு நேரமா. எழுந்திரிக்காம இன்னும் என்னடா தூக்கம் என இவனை உலுக்கினாள்.

Andrew எழுந்தான். அட சே இவ்வளவுநேரம் தான் கண்டது கனவா என நினைத்து கொண்டே brush செய்ய சென்றான்.

நன்றி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

.

காதலிக்க நேரமில்லை(சிறுகதை)…

@@@@@@என் முதல் சிறுகதை@@@@@@@

புவனா அங்க என்னடி பண்ணற?

சீக்கிரம் கிளம்பு… ஆபிசுக்கு டைம் ஆச்சு…

சூடா இட்டிலியும் வெங்காய சட்டினியும் வச்சுருக்கேன். சாப்பிட்டுட்டு லஞ்ச் பேக்கை எடுத்துட்டு போ.

ம் சரிம்மா…

புவனா அடையாரில் கணிப்பொறி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறாள்.

அங்கே புதிதாக வேலைக்கு சோ்ந்திருந்தான் ராசா. இவள் team அல்ல அவன் வேற ஒரு PHP project ல் வேலை பார்க்கிறான்.

அவன் அடிக்கடி இவளையே பார்ப்பது போன்று இவளுக்கு தோன்றியது.

ஒருநாள் Intranet Chat ல் hi…. என்று message அனுப்பினான்…

இவளும் பதிலுக்கு hi என்று அனுப்பினாள்.

Chat window ல் busy என்று set செய்து விட்டு தன் project work பார்க்க தொடங்கினாள் புவனா…


வேலை முடித்துவிட்டு 8 மணிக்கு வீட்டிற்கு போவதற்காக பஸ் ஸ்டான்டில் wait செய்து கொண்டிருந்தாள் புவனா..

அங்கே ராசாவும் வந்தான் hi என்றான். பதிலுக்கு hi என்றாள். உடனே தான் செல்ல வேண்டிய பேருந்து வந்ததால் ஓடி போய் அதில் ஏறிக் கொண்டாள்.

அவளுக்கு ஒரே குழப்பம் ஏன் இவன் தன்னையே அடிக்கடி பார்க்கிறான் பின் தொடர்கிறான் என்று…

அடுத்த நாள் வேலையை முடித்து விட்டு பேருந்துக்காக நின்று கொண்டிருந்தாள் புவனா..

ராசா வந்தான். உங்ககிட்டே கொஞ்சம் பேசனும் என்றான்.

சொல்லுங்க என்றாள் புவனா மனதில் பயத்தோடு….

எங்க team ல எல்லாரும் வேற வேற மாநிலத்தை சோ்தவங்க இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் பேசறாங்க…

நான் கிராமத்தை சோ்ந்தவன்றதால இந்தியும் தெரியாது English ம் fluent ஆக பேச வராது அதனால உங்களுக்கு free time கிடைக்கும் போது என்னோடு Intranet la English la chat பண்ணிங்கன்னா நானும் English நல்ல develop பண்ணிப்பேன். நீங்க பெரிய கான்வென்ட்ல படிச்சீங்கன்னு கேள்விப்பட்டேன் என்றான்.

Ok sure என்றாள் புவனா… பேருந்து வந்தது Bye சொன்னாள் உற்சாகமாக அப்படியே மனதுக்குள் தன்னைத்தானே திட்டிக்கொண்டாள். சின்ன விசயத்தை தான் என்னவோ ஏதோ என்று கற்பனை செய்து கொண்டதை நினைத்து.…..

நன்றி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.!
.

Blog Archive