Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

கர்ப்பிணிகளுக்காக

கர்ப்ப தாய்மார்கள் அத்திப்பழம் தேன் சிறிதளவு உப்பு சேர்த்து உண்டு வந்தால் ஆரம்ப கர்ப்ப சிதைவிலிருந்து விடுபடலாம்.

தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும் உடல் பலவீனம் கை கால் நடுக்கம் மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

திருநீற்று பச்சிலை செடியைப் பறித்து நீர்விட்டு அரைத்து மைபோல் அரைத்து சிறு உருண்டை சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும்.

சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் வாய்ப்பு குறைவு

அசைவ உணவு சாப்பிடுபவர்களைவிட சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவு என நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்.

சைவ உணவில் முக்கிய இடம் பிடிக்கும் காய்கறிகளில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளை அழிக்கும் சக்தி கொண்ட பொருள்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

வெங்காயம் மஞ்சள் மற்றும் இஞ்சி ஆகியவற்றில் நோய் எதிர்ப்பு திறன்கொண்ட சத்துக்கள் அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அசைவ உணவு வகைகளில் நோய் எதிர்ப்பு கொண்ட சத்துக்கள் மிக குறைவாக உள்ளன.

மனிதர்கள் சைவ உணவுகள் சாப்பிடுவதால் நோய் எதிர்பபு திறன் கூடுகிறதா என்பது குறித்து பிரான்சை தலைமையிடமாக கொண்ட சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கனடாவை சேர்ந்த உலக சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு ஒன்றை துவக்கி உள்ளது.

இந்த ஆய்வு இரண்டரை லட்சம் பேரிடம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நலம் தரும் மருத்துவம்

எய்ட்சை தடுக்கும் வாழைப்பழம்.



முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பல்வேறு நன்மைகளைத் தரக்கூடியது. எளிதில் ஜிரணம் ஆகும். இதில் எய்ட்ஸ் நோயைத் தடுக்கும் சக்தி இருப்பதாக அமெரிக்கா ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வாழைப்பழங்களில் லேக்டின் என்னும் ஒருவகைப்புரதம் உள்ளது. இது எய்ட்ஸ் கிருமியான எச்.ஐ.வி வைரசை ஒழிக்கும் தன்மை உடையது. தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் லேக்டின் புரதம் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும். அத்துடன் எச்.ஐ.வி கிருமி உட்புகுந்தால் அவற்றை சூழ்ந்து ஒரு உறையை ஏற்படுத்தி செயல் இழக்கச் செய்யும் ஆற்றலையும் லேக்டின் தருகிறது.

புற்றுநோயின் எதிரி பப்பாளி.


எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் பழவகையில் ஒன்று பப்பாளி. இதில் புற்றுநோய்கான எதிர்ப்பு மருந்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுட உள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள். வாய் தொண்டை கல்லீரல் நுரையீரல் இரப்பை மூளை என பல உறுப்புகளையும் பாதிக்கும் வெவ்வேறு வகை புற்றுநோய்கள் இருக்கின்றன.

மருத்துவர்களுக்கு சவாலான வியாதிகளில் புற்றுநோயும் ஒன்று. இதற்கு சாதாரண பப்பாளி இலைச்சாற்றில் எதிர்ப்பு மருந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. பப்பாளி இலைகளில் புற்றுநோய் வைரஸ்களை எதிர்க்கும் டி.எச்.1 டைப் சைடோகின்ஸ் என்னும் மூலக்கூறுகள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து புற்றுநோய் தீவிரத்தை கட்டுக்குள் வைக்கிறது.

புளோரிடா பல்கலைக்கழக ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பயனுள்ள குறிப்புகள்…

@@@@@@எனக்கு தெரிந்த சில குறிப்புகள்@@@@@@@

மீன் சாப்பிட்டுவிட்டு பாலோ பால் சார்ந்த பொருள்களோ சாப்பிடக்கூடாது.(வெண் குட்டம் நோய்) ஏற்பட இதுவும் ஒரு காரணம்.


பச்சை மிளகாய் வாங்கியதும் அதன் காம்பை கிள்ளி விடவேண்டும் அப்போது நிறைய நாட்கள் இருக்கும்.


தனியா துள் மாவு அரைக்கும் இயந்திரத்தில் கொடுத்து அரைக்கும்போது அதனுடன் பச்சரிசி சிறிதளவு (1 கிலோவிற்கு 1 ஆழாக்கு ) துவரம்பருப்பு 1 ஆழாக்கு சமையலுக்கு உபயோகப்படுத்தும் மஞ்சள் கிழங்கு 200 கிராம் சீரகம் 100 கிராம் மிளகு 100 கிராம் உடைத்த கடலை 100 கிராம் சோம்பு 100 கிராம் போட்டு அரைத்துக்கொண்டால் குழம்பு மிகவும் தண்ணியாக இல்லாமல் நன்றாக கெட்டியாக வரும். ருசியாகவும் இருக்கும். பச்சரிசியையும் துவரம்பருப்பையும் வறுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து குழம்புவகைகளுக்கும் உபயோகிக்கலாம்.


மிளகாய் துளை தனியாகவும் தனியா தூளை தனியாகவும் அரைத்து வைத்துக்கொண்டால் தனித்தனியாக உபயோகப்படுத்த சிறப்பாக இருக்கும்.(எங்கள் வீட்டில் அவ்வாறுதான் அரைப்போம்).


கோழிக்கறியை சமைத்த அன்றே சாப்பிடுவது நன்று.

சாப்பிடுவதற்கு 15 நிமிடம் முன் சிறிதளவு வெந்நீர் அருந்துவது நல்லது. உடல் எடை குறையும் உணவின் அளவும் குறையும்.

சப்பாத்திக்கு மாவு பிசையும்போது பால் அல்லது தயிர் சோ்த்து பிசைந்தால் மிருதுவாக இருக்கும். மாவு பிசைந்தவுடன் செய்யாமல் சிறிது நேரம் கழித்து சப்பாத்தி செய்யவேண்டும்.


மாகியுடன் முட்டை சோ்த்து செய்தால் சுவையாக இருக்கும்.

சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும் போது மஞ்சள்துள் சிறிதளவு வெந்தயம் சிறிதளவு சோ்த்துக் கொள்ளவேண்டும். (மஞ்சள்தூளை உணவில் சோ்த்துக் கொண்டால் பன்றிக்காய்ச்சல் வராது என்று படித்த ஞாபகம்)


நன்றி.


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.!

.

Blog Archive