Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

மூன்று பேர்.

மூன்று பேர் ஒரு ஆள்அரவமற்ற காட்டில் தனியாக வழிதெரியாமல் மாட்டிக்கொண்டனர். அவர்களிடம் 5 ரொட்டித்துண்டுகள் இருந்தது. பசி அவர்களின் வயிற்றை கிள்ளியது.

முதலாமவர் ஒரு மருத்துவர்.

இரண்டமவர் ஒரு ஞானி.

மூன்றாமவர் ஒரு விவசாயி.

அந்த ரொட்டித்துண்டுக்கு மூவரும் போட்டிப்போட்டனர். அதற்கு முடிவு கிடைக்கவில்லை. மூவரும் ஒரு முடிவெடுத்தனர். மறுநாள் காலையில் யார் மிக உயர்ந்த கருத்தை தங்கள் திறமையால் சொல்கிறார்களோ அவர்களுக்கே அந்த ரொட்டித்துண்டென்று.

மறுநாள் காலையில் மருத்துவர் சொன்னார். கடவுள் என் கனவில் தோன்றினார். நான் அவர் அருகில் சென்று அவரை அணைத்துக்கொண்டேன். நான் கடவுளை முத்தமிட்டேன். அதனால் ரொட்டி எனக்கே சொந்தம் என்றார்.

ஞானி சொன்னார். கடவுள் என் கனவிலும் தோன்றினார் நான் அவரிடம் செல்லவில்லை. அவரே என்னிடம் ஓடோடி வந்தார். கட்டியணைத்து முத்தமிட்டார். அதனால் ரொட்டி எனக்கே சொந்தம் என்றார்.

விவசாயியின் முறை வந்தது. அவர் சொன்னார். கடவுள் என் கனவிலும் தோன்றினார். நான் அவர் அருகில் செல்லவில்லை. அவரும் என் அருகில் வரவில்லை. ஆனால் ரொட்டியை அருகில் வைத்துக்கொண்டு ஏன்டா சாப்பிடாமல் இருக்கிறாய் எனக் கேட்டார். அதனால் நான் சாப்பிட்டுவிட்டேன் என்றார்.

திருடர்களை கண்டுபிடிக்கும் இயந்திரம்.-




திருடர்களை கண்டுபிடிக்கும் இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனைத்து நாடுகளுக்கும் அனுப்பப்பட்டதாம்.

அனுப்பபட்ட ஒரு வாரத்தில் அமெரிக்காவில் 50 திருடர்களை பிடித்ததாம்

இத்தாலியில் 100 திருடர்களை பிடிபட்டனர்.

ஜெர்மனியில் 75 திருடர்கள் பிடிபட்டனர்.

ரஷ்யாவில் 145 திருடர்கள் பிடிபட்டனர்.

ஜப்பானில் 200 திருடர்கள் பிடிபட்டனர்.

இந்தியாவில் ஒரு திருடனைக்கூட அந்த இயந்திரத்தால் பிடிக்கமுடியவில்லை. ஏன் என்றால் அந்த மெஷின் வந்த மறுநாளிலிலேயே அந்த மெஷினைக் காணவில்லை.

நன்றி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

எமதா்மராசாவின் தீா்பு

மூன்று முக்கியமான அரசியல் தலைவர்கள் ஆட்டோ ரிக்சாவில் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது ஒரு விபத்து ஏற்படுகிறது. மூன்று பேரும் இறந்துவிடுகின்றனர்.

இவர்களின் மரணத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் எமதர்மராஜா அவர்களை எமலோகத்திற்கு கூட்டிச்செல்கிறான். அவர்களின் பெயர் XX,AA,BB என வைத்துக்கொள்வோம்.(நிஜ தலைவர்கள் பெயர் வைத்தால் ஆட்டோ வரும்னு பயமா இருக்கு)

எமராஜா XX மற்றும் AA இருவரையும் சொர்க்கத்திற்கு அனுப்பிவைக்கிறார்.

BB யை நரகத்திற்கு அனுப்பிவைக்கிறார். BB இது என்ன அநியாயமான தீர்பாகவுள்ளது. அவர்களும் தான் நிறைய குற்றங்கள் செய்து உள்ளனர். மக்கள் பணத்தில் சொத்துக்கள் சேர்த்துக்கொண்டுள்ளனர். என்னைமட்டும் ஏன் நரகத்திற்கு அனுப்பினீர்கள் என கேள்வி எழுப்பினார்.

சரி உங்களுக்கு நான் ஒரு பரிச்சை வைக்கிறேன். அதில் பாசாகிறவர்கள் சொர்கத்திற்கு பெயில் ஆகிறவர்கள் நரகத்திற்கு என்றார் எமதர்மராசா.

மூவரும் பரிச்சைக்கு ஒத்துக்கொண்டனர். எமராசா XX அவர்களிடம் இந்தியா எப்போது சுதந்திரம் பெற்றது என்ற கேள்வியை கேட்டார். XX -1947 என்று சரியான விடையை சொன்னார். XX பாசாகிவிட்டதால் சொர்க்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.


AA அவர்களிடம் சுதந்திரப்பேராட்டத்தின்போது எத்தனைபேர் இறந்தனர். மூன்று விடைகளில் ஒன்றை தேர்தெடுக்கலாம் என்றார். 100000,200000,300000. AA -200000 என்ற சரியான விடையை தேர்தெடுத்ததால் சொர்க்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

BB அவா்களிடம்சுதந்திரப்பேராட்டத்திற்காக இறந்த இரண்டு இலட்சம் பேர்களின் பெயர்களை எழுதுக என்றார் எமதர்மராசா. BBக்கு பதில் தெரியாததால் பெயிலாகிவிட்டார். நரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

கதையின் நீதி : தலைமை(MANAGEMENT) என்ன முடிவெடுக்கிறதோ அதை எப்படியும் செயல்படுத்தியே தீரும்.


முற்றும்

நன்றி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

Blog Archive