Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

புதுஉலகம்.

கைநீட்டி வாங்க
தேவையில்லை
வங்கிக்கணக்கிற்கு
வந்துவிடுகிறது
ஊதியம்.

மனதின் எண்ணங்கள்
நிமிடத்தில்
எழுத்துக்களாக
பதிவுலகில்.

ஒரு கோடியில் உள்ள
சித்ராவின் எண்ணத்தை
மறுகோடியில் உள்ள
மித்ரா அறிகிறாள்.

என்னே விந்தை
உலகம் சுருங்கியது
மனிதர்கள் நெருங்கினர்

ஆசிரியர் மாணவர்
ஆராய்ச்சியாளர்
கணிப்பொறியாளர்
வடிவமைப்பாளர்
வங்கியாளர்
பாகுபாடில்லை
இப்புதுவுலகில்.

இப்போதே இப்படி
இன்னும் வருங்காலம்
இன்னும் எத்துணை
அதிசயங்கள் கொண்டிருக்குமோ
வரவேற்போம் புதுஉலகை.


நன்றி

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

.

நேசமனம் (கவிதை)





ஓடோடி உழைத்து
பொருளீட்டி
நீங்கள் உயர
உழைத்தேன் நான்.

எமக்கென என் செய்தாய்
என கேள்விக்கணைகளுடன்
நீங்கள்

இழந்த பருவத்தை
சொல்வதா
இல்லாத பணத்தை
சொல்வதா.

எல்லாம் இருந்தும்
நிறைமனம் இல்லாமல்
குறைமனம் கொண்டு
இருப்பதேன் நீங்கள்.

சுற்றமாய் இருந்தும்
சுயநலமாய் இருப்பதேன்
பதில் தெரியா
கேள்விகளுடன் நான்.

பணபற்று பாசத்தை
பட்டுப்போக செய்கிறது
மாறுமா மனம்
ஏக்கத்துடன் நான்.

நன்றி

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

.

Blog Archive