நலம் தரும் மருத்துவம்

எய்ட்சை தடுக்கும் வாழைப்பழம்.



முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பல்வேறு நன்மைகளைத் தரக்கூடியது. எளிதில் ஜிரணம் ஆகும். இதில் எய்ட்ஸ் நோயைத் தடுக்கும் சக்தி இருப்பதாக அமெரிக்கா ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வாழைப்பழங்களில் லேக்டின் என்னும் ஒருவகைப்புரதம் உள்ளது. இது எய்ட்ஸ் கிருமியான எச்.ஐ.வி வைரசை ஒழிக்கும் தன்மை உடையது. தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் லேக்டின் புரதம் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும். அத்துடன் எச்.ஐ.வி கிருமி உட்புகுந்தால் அவற்றை சூழ்ந்து ஒரு உறையை ஏற்படுத்தி செயல் இழக்கச் செய்யும் ஆற்றலையும் லேக்டின் தருகிறது.

புற்றுநோயின் எதிரி பப்பாளி.


எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் பழவகையில் ஒன்று பப்பாளி. இதில் புற்றுநோய்கான எதிர்ப்பு மருந்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுட உள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள். வாய் தொண்டை கல்லீரல் நுரையீரல் இரப்பை மூளை என பல உறுப்புகளையும் பாதிக்கும் வெவ்வேறு வகை புற்றுநோய்கள் இருக்கின்றன.

மருத்துவர்களுக்கு சவாலான வியாதிகளில் புற்றுநோயும் ஒன்று. இதற்கு சாதாரண பப்பாளி இலைச்சாற்றில் எதிர்ப்பு மருந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. பப்பாளி இலைகளில் புற்றுநோய் வைரஸ்களை எதிர்க்கும் டி.எச்.1 டைப் சைடோகின்ஸ் என்னும் மூலக்கூறுகள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து புற்றுநோய் தீவிரத்தை கட்டுக்குள் வைக்கிறது.

புளோரிடா பல்கலைக்கழக ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உங்கள் கவனத்திற்கு

உங்கள் உருவத்திற்கு சரியாகப் பொருந்தும் ஆடைகளையே எப்போதும் வாங்குங்கள். அப்படி சரியாகக் கிடைக்காத பட்சத்தில் சற்று பெரிய அளவுடைய ஆடைகளை தேர்தெடுங்கள். ஏனெனில் பெரிய அளவுள்ள ஆடைகளை சிறியதாக மாற்றிக் கொள்ளலாம்.

துவைத்து அயர்ன் செய்த ஆடைகளை மட்டுமே அணியங்கள்

உங்களுடைய ஆடைகளில் அதிக பட்சமாக 4 வண்ணங்களுக்கு மிகாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். அதிகப்படியான வண்ணங்கள் பார்ப்பவரின் கண்களைக் கூசச்செய்யும்

ஆடைகளுடன் பொருந்திப்போகும் நகைகள் தொப்பி கண்ணாடி காலனி ஆகியவற்றையே அணியுங்கள். அதுவும் தேவை என்றால் மட்டுமே அணியலாம்.

வாசனைத் திரவியங்களை குறைவாகப் பயன்படுத்துங்கள். அடிக்கடி வாசனை திரவியங்களை மாற்றாமல் ஒரே வாசனை திரவியத்தை தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

நகைகளை அதற்கு உரிய இடங்களில் வையுங்கள்.

மூன்று பேர்.

மூன்று பேர் ஒரு ஆள்அரவமற்ற காட்டில் தனியாக வழிதெரியாமல் மாட்டிக்கொண்டனர். அவர்களிடம் 5 ரொட்டித்துண்டுகள் இருந்தது. பசி அவர்களின் வயிற்றை கிள்ளியது.

முதலாமவர் ஒரு மருத்துவர்.

இரண்டமவர் ஒரு ஞானி.

மூன்றாமவர் ஒரு விவசாயி.

அந்த ரொட்டித்துண்டுக்கு மூவரும் போட்டிப்போட்டனர். அதற்கு முடிவு கிடைக்கவில்லை. மூவரும் ஒரு முடிவெடுத்தனர். மறுநாள் காலையில் யார் மிக உயர்ந்த கருத்தை தங்கள் திறமையால் சொல்கிறார்களோ அவர்களுக்கே அந்த ரொட்டித்துண்டென்று.

மறுநாள் காலையில் மருத்துவர் சொன்னார். கடவுள் என் கனவில் தோன்றினார். நான் அவர் அருகில் சென்று அவரை அணைத்துக்கொண்டேன். நான் கடவுளை முத்தமிட்டேன். அதனால் ரொட்டி எனக்கே சொந்தம் என்றார்.

ஞானி சொன்னார். கடவுள் என் கனவிலும் தோன்றினார் நான் அவரிடம் செல்லவில்லை. அவரே என்னிடம் ஓடோடி வந்தார். கட்டியணைத்து முத்தமிட்டார். அதனால் ரொட்டி எனக்கே சொந்தம் என்றார்.

விவசாயியின் முறை வந்தது. அவர் சொன்னார். கடவுள் என் கனவிலும் தோன்றினார். நான் அவர் அருகில் செல்லவில்லை. அவரும் என் அருகில் வரவில்லை. ஆனால் ரொட்டியை அருகில் வைத்துக்கொண்டு ஏன்டா சாப்பிடாமல் இருக்கிறாய் எனக் கேட்டார். அதனால் நான் சாப்பிட்டுவிட்டேன் என்றார்.

கர்ப்பகாலத்தின் போது சாப்பிடவேண்டிய உணவுகள்


கர்ப்பகாலத்தின்போது கொஞ்சம் அதிகமான உணவினை எடுத்துக்கொள்ளவேண்டும். 1 நாளைக்கு 300 கலோரிகள் அதிகமாக தேவைப்படும்.

புரோட்டீன்.


செல்களின் வளர்ச்சிக்கும் இரத்த உற்பத்திக்கும் தேவைப்படுகிறது.
மீன்,முட்டையின் வெள்ளைக்கரு போன்றவற்றில் புரோட்டீன் அதிகளவில் உள்ளது.

கார்போஷைட்ரேட்


உருளைக்கிழங்கு,அரிசி,பழங்கள்,காய்கறிகள்

கால்சியம்


வலுவான எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக்கத்திற்கு தேவைப்படுகிறது.

Iron


சிவப்பணுக்கள் உருவாக்கத்திற்கு தேவைப்படுகிறது.

வைட்டமின் A


கண்பார்வைக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் தேவைப்படுகிறது. கேரட் உருளைக்கிழங்கு.

வைட்டமின் C


வலுவான ஈறுகளுக்கும் பற்களுக்கும் தேவைப்படுகிறது. தக்காளி

போலிக் அமிலம்


இரத்த உற்பத்திக்கு தேவைப்படுகிறது. பீன்ஸ்,ஆரஞ்சு பழம்.

திருடர்களை கண்டுபிடிக்கும் இயந்திரம்.-




திருடர்களை கண்டுபிடிக்கும் இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனைத்து நாடுகளுக்கும் அனுப்பப்பட்டதாம்.

அனுப்பபட்ட ஒரு வாரத்தில் அமெரிக்காவில் 50 திருடர்களை பிடித்ததாம்

இத்தாலியில் 100 திருடர்களை பிடிபட்டனர்.

ஜெர்மனியில் 75 திருடர்கள் பிடிபட்டனர்.

ரஷ்யாவில் 145 திருடர்கள் பிடிபட்டனர்.

ஜப்பானில் 200 திருடர்கள் பிடிபட்டனர்.

இந்தியாவில் ஒரு திருடனைக்கூட அந்த இயந்திரத்தால் பிடிக்கமுடியவில்லை. ஏன் என்றால் அந்த மெஷின் வந்த மறுநாளிலிலேயே அந்த மெஷினைக் காணவில்லை.

நன்றி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

ஆணாதிக்கமும் பெண்களின் நிலைமையும்


ஆணாதிக்கம் பற்றி சிலர் எழுத படித்துள்ளேன். என் கருத்தையும் வெளியிடவே இந்தப்பதிவு. நிறைய பேர் ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துகின்றனர் அப்படி இப்படி என்று எழுதுகின்றனர். அடிமைப்படுத்துதல் என்றால் என்ன ? ஒரு தந்தையாகிய ஆண் தன் மகளை அடிமைப்படுத்தி படிக்க அனுமதியாமல் இருந்திருந்தால் அவர்கள் இவ்வாறெல்லாம் எழுதிக்கொண்டிருக்கமுடியுமா.

தந்தையோ தாயோ தாங்கள் உயர்தரமான வாழ்க்கை வாழவில்லையெனினும் தன் மகளோ மகனோ உயர்தரமான வாழ்க்கை வாழவேண்டும் என்றே விரும்புகின்றனர். இதில் எங்கிருக்கிறது அடிமைத்தனம்.

என் வாழ்க்கையை பொறுத்தவரை என் தந்தையோ,சகோதரனோ,கணவனோ என்னை அடிமைப்படுத்தியதாக நினைவில்லை. மாறாக என் வளர்ச்சியையே அவர்கள் எப்போதும் விரும்புகின்றனர். நுற்றுக்கு எண்பது சதவீதம் பேர்கள் இப்படித்தான் பெண்களின் வளர்ச்சியையே விரும்புகின்றனர.. எங்கோ ஒரு சில தவறுகள் நடந்துகொண்டிருக்கலாம். ஆனால் எல்லாரையும் ஒட்டுமொத்தமாக குறைகூறுவது தவறு

பெண்ணின் வெற்றிக்கு காரணமாக ஆண்கள் இருக்கின்றனர். அதனால்தான் இந்த அளவிற்கு பெண்கள் உயர்ந்துகொண்டிருப்பதற்கு காரணம்.

ஒரு சில பாதுகாப்பு காரணங்களுக்காக வீட்டிற்கு சீக்கிரம் வந்துவிடவேண்டும். நல்ல கண்ணியமான ஆடைகளை அணியவேண்டும் என்று பெற்றோர் சொல்லுகின்றனர். அதையெல்லாம்கூட ஒரு சிலர் அடிமைத்தனம் என்று சொல்கின்றனர். நம் நலத்திற்காக சொல்லப்படும் வார்த்தைகள் எப்படி அடிமைத்தனம் ஆகும்.

ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துவதில்லை. அவர்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றனர் என்பதே என் கருத்து.
இதை வாசிக்கும் தங்களின் கருத்துக்களையும் பின்னூட்டத்தின் மூலம் தெரிவிக்கலாம்.

நன்றி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.